டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைதாகும் வாய்ப்பு எதிர்க்கட்சிகளை உளவு பார்த்ததாக வழக்குப்பதிவு

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைதாகும் வாய்ப்பு எதிர்க்கட்சிகளை உளவு பார்த்ததாக வழக்குப்பதிவு

2 mins read
eddccaec-b16a-40c2-83ff-32631c748c1b
-

புது­டெல்லி: எதிர்க்­கட்­சி­களை உளவு பார்த்த குற்­றச்­சாட்­டு­கள் உறு­தி­யா­னதை அடுத்து, டெல்லி துணை முதல்­வர் மணிஷ் சிசோ டியா (படம்) மீது புதிய வழக்­குப் பதிய சிபிஐ அதி­கா­ரி­க­ளுக்கு மத்­திய உள்­துறை அமைச்சு அனு­மதி அளித்­துள்­ளது.

ஆனால், அவர் மீது தொடுக் கப்­பட்­டுள்ள இரண்டு வழக்கு களும் பொய்­யா­னவை என ஆம் ஆத்மி கட்சி கூறி­யுள்­ளது. எனி­னும், இவ்­வ­ழக்­கு­க­ளால் மணிஷ் சிசோ­டியா கைதா­கும் சூழல் நெருங்­கி­யுள்­ள­தாக பாஜ­க­வி­னர் கோடி காட்டுகின்றனர்.

டெல்லி மது­பா­னக் கொள்­கையை அமல்­ப­டுத்­தி­ய­தில் முறை­கே­டு­கள் நடந்­தது தொடர்­பாக சிபிஐ, அமலாக்­கத்­துறை விசா­ர­ணை­யின் பிடி­யில் ஆம் ஆத்மி­யின் மூத்த தலை­வ­ரான மணிஷ் சிசோடியா சிக்­கி­யுள்­ளார்.

இது­கு­றித்த விசா­ர­ணைக்கு நாளை மறு­நாள் 26ஆம் தேதி அவர் சிபிஐ அதி­கா­ரி­கள் முன்பு முன்­னி­லை­யாக உள்­ளார்.

இந்­தச் சூழ­லில், மணிஷ் சிசோ டியா இப்­போது மற்­றொரு புதிய வழக்­கில் சிக்­கி­யுள்­ளார்.

கடந்த 2015ல் 'ஃபீட்பேக் யூனிட் (எஃப்.பி.யு)' என்ற அமைப்பை டெல்லி அரசு அமைத்­தது. டெல்­லி­யில் நடை­பெ­றும் ஊழல்­கள் கண்­கா­ணிக்­கப்­பட்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அப்­போது மணிஷ் சிசோ­டியா அறி­வித்­தி­ருந்த நிலை­யில், அது­போன்று எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

ஆம் ஆத்­மி­யின் அர­சி­யல் ஆதாயத்­திற்­காக பல்­வேறு முக்­கி­யப் பிர­மு­கர்­கள், அதி­கா­ரி­கள், அலுவ­லர்­களை உளவு பார்த்து எஃப்.பி.யு அமைப்பு தக­வல்­களை சேக­ரித்­துள்­ள­தாகப் புகார்­கள் கிளம்­பின. இதை­ய­டுத்து, சிபிஐ நடத்­திய விசா­ர­ணை­யில் முழு­மை­யான விதி­மீ­றல்­கள் நடந்­துள்­ள­தாக உள்துறை அமைச்­சி­டம் சிபிஐ அறிக்கை சமர்ப்­பித்­தது.

இந்­நி­லை­யில், மணிஷ் சிசோ­டியா மீது ஊழல் தடுப்­புச் சட்­டத்­தின்­கீழ் வழக்­குப்­ப­திவு செய்து விசாரணை நடத்த சிபி­ஐக்கு மத்திய உள்­துறை அமைச்சு அனு­மதி அளித்­துள்­ளது.

இது­கு­றித்து மணிஷ் சிசோ டியா தனது டுவிட்­டர் பதி­வில், "எதி­ரி­கள் மீது பொய் வழக்­கு­கள் பதிவு செய்­வது என்­பது ஒரு பல­வீ­ன­மான, கோழைத்­த­ன­மான செயல். ஆம் ஆத்மி­யின் வளர்ச்சி பொறுக்காமல் மேலும் பல வழக்­கு­கள் எங்­கள் மீது பதி­வா­கும். அவற்றை நாங்­கள் வெற்றிகரமாக எதிர்­கொள்வோம்," எனக் கூறி­யுள்­ளார்.