தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஷ்யா சென்ற இந்திய மருத்துவ மாணவர்கள்

2 mins read
b50fa4e3-5345-4f41-b394-16d33da974bb
-

உக்ரேனில் 2,500; ரஷ்யா, செர்பியா, உஸ்பெகிஸ்தானில் 4,000 பேர்

புது­டெல்லி: உக்­ரேன், ரஷ்யா இடையே நீடித்து வரும் போர் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள இந்­திய மருத்­துவ மாண­வர்­கள் தற்­போது பிற நாடு­களில் உள்ள கல்­லூ­ரி­களில் தங்­க­ளு­டைய படிப்பைத் தொடர்­கின்­ற­னர்.

ரஷ்யா, செர்­பியா, உஸ்­பெகிஸ்­தான் உள்­ளிட்ட நாடு­களில் உள்ள மருத்­து­வக் கல்­லூ­ரி­களில் இந்­திய மாண­வர்­கள் சேர்ந்­துள்­ள­தாக ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் ரஷ்யா வீசிய முதல் குண்டு உக்­ரேன் மண்­ணில் விழுந்த அந்­நாள் முதல் இந்­திய மாண­வர்­கள் பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கு ஆளாகி வரு­கின்­ற­னர்.

உக்­ரே­னில் ஏறத்­தாழ 17 ஆயி­ரம் இந்­திய மாண­வர்­கள் அங்­குள்ள மருத்­து­வக் கல்­லூ­ரி­களில் படித்து வந்­த­னர். போர் மூண்டதும் அவர்­கள் அனை­வ­ரும் இந்­திய அர­சால் பத்­தி­ர­மாக தாயகம் மீட்­கப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், கடந்த ஓராண்­டுக்­கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதனால் மாண­வர்­க­ளின் படிப்பு கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்பாக மருத்துப் படிப்பை மேற்கொண்டுள்ள மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

மீண்­டும் உக்­ரேன் செல்­வது பாது­காப்­பாக இருக்­காது என்று கரு­தும் மாண­வர்­கள் இப்­போது ரஷ்யா, செர்­பியா, உஸ்­பெ­கிஸ்­தான் உள்­ளிட்ட வேறு சில நாடு­களில் உள்ள மருத்­துவ கல்­லூ­ரி­களில் சேர்ந்து படித்து வரு­கின்­ற­னர்.

இந்­திய மாண­வர்­க­ளுக்கு ரஷ்­யா­வில் நல்ல வர­வேற்பு கிடைத்து வரு­வ­தா­க­வும் எஞ்­சி­யுள்ள மருத்­து­வப் படிப்பை முடிக்க இய­லும் என்று நம்­பு­வ­தா­க­வும் சொல்­கி­றார் ரஷ்­யா­வின், நார்த்­தர்ன் ஸ்டேட் மருத்­துவ பல்­க­லைக்­க­ழ­கத்­தில் சேர்ந்­துள்ள 25 வய­தான கேரள மாணவி ஜிஸ்னா.

உக்­ரே­னுக்­குச் செல்ல தயங்­கிய சுமார் நான்­கா­யி­ரம் மாண­வர்­கள் ரஷ்யா உள்­ளிட்ட நாடு­க­ளுக்குச் சென்று மருத்­து­வப் படிப்பை மேற்­கொள்ள இட­மாறு­தல் அனு­மதி பெற்­றி­ருப்­ப­தாக உக்­ரேன் இந்­திய மருத்­துவ மாண­வர்­க­ளின் பெற்­றோர் சங்­கத் தலை­வர் ஆர்.பி.குப்தா தெரி­வித்­துள்­ளார்.

எனி­னும், 2,500 மாண­வர்­கள் மீண்­டும் உக்­ரே­னுக்­குச் சென்று அங்கு மருத்துவப் படிப்பை தொடர்­வ­தா­க­வும் அவர் மேலும் கூறி­ உள்ளார்.