உயிரைக் காப்பாற்றிய ஆடவரை ஓராண்டாகப் பின்தொடரும் நாரை

1 mins read
f1897d33-1dc9-4b03-af2c-cff3c3912bb4
-

லக்னோ: உத்­த­ரப்­பி­ர­தே­சத்தை சேர்ந்த முகம்­மது ஆரிப் என்ற ஆட­வர் ெசல்­லும் இடங்­க­ளுக் கெல்­லாம் கடந்த ஓராண்டு கால­மாக நாரை பறவை ஒன்­றும் பறந்து நட்பு பாராட்டி வரு­கிறது. இதனை மக்­கள் பல­ரும் வியந்து பார்த்து வரு­கின்­ற­னர்.

அமேதி மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வ­ரான ஆரிப், கடந்த ஆண்டு மோட்­டார் சைக்­கி­ளில் சென்றுகொண்­டி­ருந்­த­போது, வாக­னத்­தில் அடி­பட்டு இந்த நாரை சாலை­யோ­ர­மாக உயி­ருக்­குப் போரா­டிக்­கொண்டு இருந்­துள்­ளது.

உடனே ஆரிப் அதனை மீட்டு அதற்கு மருத்­துவ சிகிச்சை அளித்து அதனை வீட்­டிற்கு எடுத்­துச் சென்­றார். நாரை­யின் கால்­கள் குண­மா­கும் வரை அதை தன் வீட்­டி­லேயே வைத்து உண­வ­ளித்தவர், குணம் அ­டைந்­த­வு­டன் அதை வெளி­யில் பறக்­க­விட்­டார். ஆனால், அது எங்­கும் பறந்து செல்ல விரும்பாமல் ஆரிப்­பு­ட­னேயே தங்­கி­விட்­டது.

ஆரிப்பின் வீட்டில் அவ­ரது மனைவி, இரு குழந்­தை­கள், பெற்­றோ­ரு­டன் அந்த நாரை­யும் ஒரு குடும்ப உறுப்­பி­ன­ராக வசித்து வரு­கிறது.

அத்­து­டன், சாலை­கள், வயல்­வெளி, வீடு என ஆரிப் மோட்­டார் சைக்­கி­ளில் செல்­லும் இடங்­க­ளுக்கு எல்­லாம் நாரை­யும் அவரை நிழல்­போல் ­தொ­டர் ­கிறது. இந்­தக் காணொளி இணை­யத்தில் பரவி வரு­கிறது.