'தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா மாபெரும் வளர்ச்சி'

'தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா மாபெரும் வளர்ச்சி'

2 mins read
cef50e65-a8db-4135-a5f3-d39a9ab87d4f
-

புது­டெல்லி: தக­வல் தொழில்­நுட்­பத் துறையில் இந்­தி­யா­ மாபெரும் வளர்ச்சி அடைந்து வருவதாக ஜெர்­மன் பிர­த­மர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பய­ண­மாக இந்­தியா வந்­துள்ள ஓலாஃப் ஸ்கோல்ஸ், டெல்­லி­யில் பிர­த­மர் மோடி­யைச் சந்­தித்துப் பேசி­னார். நான்­கா­வது முறை­யாக இரு பிர­த­மர்­களும் சந்­தித்­துக் கொண்­ட­னர்.

பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பு, பாது­காப்­புத் துறை­யில் மேலும் இணைந்து செயல்­ப­டு­வது குறித்து இரு­நாட்­டுத் தலைவர்­களும் ஆலோ­சனை மேற்­கொண்­ட­னர்.

பின்­னர் கூட்­டாகச் செய்தி யாளர்­க­ளைச் சந்­தித்து இரு நாட்­டுப் பிர­த­மர்­களும் பேசி­னர்.

அப்­போது பேசிய பிர­த­மர் நரேந்­திர மோடி, ஓலாஃப் ஸ்கோல்ஸ்சு­டன் உள்­நாட்டு, அனைத்­து­லக விவ­கா­ரங்­கள் குறித்து ஆலோ­சித்­த­தா­கக் கூறி­னார்.

'இந்­தி­யா­வில் தயா­ரிப்­போம் திட்­டம்', 'சுய சார்பு இந்­தியா திட்­டம்' ஆகி­ய­வற்­றிற்கு ஜெர்­மனி முழு ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்­டும் என கேட்­டுக்கொண் ட­தாகவும் பிர­த­மர் கூறி­னார்.

இந்­தியா-ஜெர்­ம­னிக்­கான உறவு ஆழமான புரி­த­லைக் கொண்­டது என்­றும் வர்த்­த­கப் பரி­மாற்ற வர­லாற்­றைக் கொண்­டது என்றும் உக்ரேன் பிரச்சினை களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இந்தியா தயாராக உள்ளது என்­றும் பிரதமர் மோடி கூறினார்.

பின்­னர் பேசிய ஜெர்­மனி பிர­த­மர், "தக­வல் தொழில்­நுட்­பத் துறையில் இந்­தி­யா அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. திற­மை­மிக்க இந்­திய இளை­ஞர்­க­ளை ஜெர்மனி நிறு­வ­னங்­கள் பணி­யில் சேர்த்­துக்­கொள்ள ஆர்­வம் காட்டி வரு­கின்றன," எனக் கூறினார்.

ஜி-20 அமைப்­புக்கு இந்­தியா தலை­மைத்­து­வம் ஏற்­றுள்ள நிலை­யில், ெஜர்­மனி அனைத்து நட­வ­டிக்­கை­க­ளி­லும் முழு ஆதரவை வழங்­கும் என்று ஓலாஃப் ஸ்கோல்ஸ் கூறி­னார்.