மேகாலயா: நாகலாந்து, மேகா லயா சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைந்த நிலையில், இவ்விரு மாநிலங் களிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இரு மாநிலங்களிலும் தலா 60 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், பாஜக, காங்கிரஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவை அமைதியாக நடத்த அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள தேர்தல் ஆணையம், மக்கள் வாக்குப்பதிவில் பங்கேற்று தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளது.
இதனிடையே, மேகாலயா மாநிலத்தை ஒட்டியுள்ள பங்ளாதேஷ் எல்லை முழுவதும் மூடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி கூடுதல் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் நாகலாந்து எல்லையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

