டெல்லி சிபிஐ தலைமை அலுவலகச் சுற்று வட்டாரத்தில் 144 தடை உத்தரவு மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ மீண்டும் விசாரணை

டெல்லி சிபிஐ தலைமை அலுவலகச் சுற்று வட்டாரத்தில் 144 தடை உத்தரவு மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ மீண்டும் விசாரணை

2 mins read
0a049ad8-b9a2-4b63-b159-7f488715ad77
-

புது­டெல்லி: புதிய மது­பா­னக் கொள்கை முறை­கேடு தொடர்­பாக, டெல்லி துணை முதல்­வர் மணீஷ் சிசோ­டி­யா­வி­டம் சிபிஐ அதி­கா­ரி­கள் நேற்று விசா­ரணை நடத்­தி­னர்.

அவரது வரு­கை­யால் சிபிஐ தலைமை அலு­வ­ல­கத்­திற்கு வெளியே ஆம் ஆத்மி கட்சித் தலை­வர்­கள் போராட்­டம் நடத்த வாய்ப்­பிருப்­ப­தாக உள­வுத்­துறை எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்ததை அடுத்து, அங்கு 144 தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

முன்­ன­தாக மத்­திய பாஜ­கவை கடு­மை­யாக விமர்­சித்த மணீஷ் சிசோ­டியா, "நான் குறைந்­தது ஏழெட்டு மாத காலம் சிறை­யில் இருக்­க­வேண்­டிய சூழல் வர­லாம். அதற்­காக யாரும் வருத்­தப்­ப­டா­தீர்­கள். மாறாக பெரு­மைப்­பட்­டுக் கொள்­ளுங்­கள்.

"ஏனெ­னில், நமது பிர­த­மர் நரேந்­திர மோடி, அர­விந்த் கெஜ்ரி ­வா­லைக் கண்­டால் பயப்­ப­டு­கிறார். அத­னால்­தான் என்னை பொய் வழக்­கில் சிக்க வைக்க விரும்­பு­கி­றார். இந்த வழக்­கில் எனக்கு உறு­து­ணை­யாக இருந்து வந்த என் மனைவி தற்­போது உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டுள்ள அவரைக் கவ­னித்­துக்கொள்­ளுங்­கள். டெல்லி குழந்­தைகள் அனை­வ­ரும் நன்­றா­கப் படி­யுங்­கள். பெற்­றோர் சொல்­வ­தைக் கேட்டு நடந்து கொள்­ளுங்­கள்,'' என உருக்­க­மா­கக் கூறி­னார்.

கடந்த 2021-22ஆம் ஆண்­டில் ஆம் ஆத்மி அரசு அறி­மு­கப்படுத்­திய புதிய மது­பா­னக் கொள்­கை­யில் மிகப்பெரிய அள­வில் அக்­கட்­சி­யின் தலைவர்­கள் முறை­கேடு­களில் ஈடுபட்டிருப்­ப­தாக குற்­றச்­சாட்­டு­கள் எழுந்­தன.

மது­பான வியா­பாரிகளில் சில­ருக்கு மட்­டும் மது­பா­னக் கொள்­கை­க­ளைத் தளர்த்தி, உரி­மங்­கள் வழங்கி, சலு­கை­களை ஆம்­ஆத்மி தலைவர்­கள் அளித்­த­தா­க­வும் இதன்­மூ­லம் ரூ.100 கோடி அள­வுக்கு ஊழல் நடந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

இவ்வழக்­கில் மணிஷ் சிசோ­டியா கைது செய்யப்படலாம் என முன்னதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

அவர் தனது டுவிட்­டர் பக்­கத்­தில் "கட­வுள் உன்­னு­டன் இருக்­கி­றார் மணீஷ். லட்­சக்­க­ணக்­கான குழந்­தை­கள், பெற்­றோ­ரின் ஆசி­ உங்­க­ளு­டன் உள்­ளன. நாட்­டிற்­கா­க­வும் சமூகத்­திற்­கா­க­வும் சிறைக்­குச் செல்­வது சாப­மல்ல, பெருமை," என குறிப்­பிட்டுள்ளார்.

மீண்டும் சிபிஐ விசாரணைக்குச் செல்கிறேன். ஏழெட்டு மாதங்கள் சிறையில் இருந்தாலும் கவலையில்லை. நான் பகத்சிங்கை பின்பற்றுபவன், சிறை செல்வதற்கு எல்லாம் அஞ்சமாட்டேன். கோடிக்கணக்கான மக்கள் என் பக்கம் உள்ளனர்.

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோ­டி­யா­