மூன்றாவது அணி பாஜகவுக்கே சாதகமாக அமையும்; அரசியலில் இருந்து சோனியா ஓய்வு

மூன்றாவது அணி பாஜகவுக்கே சாதகமாக அமையும்; அரசியலில் இருந்து சோனியா ஓய்வு

2 mins read
3b70bd94-8cf0-4ef6-acac-448b393bef17
-

புதுடெல்லி: பாஜ­கவை வீழ்த்த ஒத்த கருத்­து­டைய கட்­சி­க­ளு­டன் இணைந்து செயல்­ப­டத் தயார் என காங்­கி­ரஸ் அறி­வித்­துள்­ளது.

நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் மூன்­றா­வது அணி உரு­வா­னால் அது பாஜ­க­வுக்கே சாத­க­மாக அமை­யும் என்று காங்­கி­ரஸ் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே தெரி­வித்­துள்­ளார்.

சட்­டீஸ்­கர் மாநி­லம், ராய்ப்­பூ­ரில் கடந்த மூன்று நாள்­க­ளாக நடை­பெற்று வரும் காங்­கி­ரஸ் கட்­சி­யின் அகில இந்­திய மாநாட்­டில், கட்­சி­யின் மூத்த தலை­வர்­கள், செயற்­குழு உறுப்­பி­னர்­கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரும் கலந்­து­கொண்­ட­னர்.

கூட்­டத்­தில் உரை­யாற்­றிய காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் சோனியா காந்தி, ஒரு சில முத­லா­ளி­க­ளின் நல­னுக்­காக நாட்­டின் ஒட்­டு­மொத்த பொரு­ளா­தார வளத்­தை­யும் பிர­த­மர் மோடி­யும் பாஜக அர­சும் பாழ்­ப­டுத்தி வரு­வ­தாக குற்­றம்­சாட்­டி­னார்.

ராகுல் காந்தி நடத்­திய நாடு தழு­விய 'பாரத் ஜோடோ' யாத்­திரை காங்­கி­ரஸ் கட்­சிக்கு ஒரு திருப்­பு­மு­னை­யாக அமை­யும் எனக் கூறிய அவர், இந்த யாத்­தி­ரை­யு­டன் தான் அர­சி­ய­லில் இருந்து ஓய்வு பெறு­வ­தா­க­வும் தெரி­வித்­தார்.

தொடர்ந்து பேசிய காங்­கி­ரஸ் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே, பாஜக அர­சால் நாட்­டின் ஜன­நா­ய­க­மும் அர­சி­யல் சாச­ன­மும் பெரும் அச்­சு­றுத்­த­லுக்கு ஆளாகி இருப்­ப­தாக விமர்­சித்­தார்.

நேற்­று­டன் முடி­வுற்ற மாநாட்­டில் காங்­கி­ரஸ் கட்­சிக்­குள் செய்­யப்­பட வேண்­டிய மாற்­றங்­கள், ஒன்­பது மாநி­லத் தேர்­தல்­கள், நாடா­ளு­மன்­றத் தேர்­தல் அகி­ய­வற்­றில் கூட்­டணி வைப்­பது குறித்து ஆலோ­சிக்­கப்­பட்டதாக­வும் தக­வல்­கள் கூறின.

நாட்­டின் அனைத்து நிா்வாக அமைப்­பு­க­ளை­யும் பாஜக கைப்­பற்­றி­யுள்­ள­தாக சோனியா காந்தி குற்­றம்­சாட்­டி­யதை அடுத்து, அவ­ரது இந்­தக் கருத்துகள் நிா்வாக அமைப்­பு­க­ளின் தன்­னாட்சி, அதி­கா­ரங்­கள்­மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தல் என்­றும் உண்­மைத் தன்மை இல்­லாமல் பேசுகிறார் என்­றும் பாஜக மூத்த தலைவா் ரவி­சங்கா் பிரசாத் சாடி­யுள்­ளார்.