மேகாலயா, நாகாலாந்தில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு

மேகாலயா, நாகாலாந்தில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு

2 mins read
566396df-81b1-4411-b6a8-08ae1c9a944f
-

நாக­ாலாந்து: வட­கி­ழக்கு மாநி­லங்­க­ளான மேகா­லயா, நாகா­லாந்து சட்ட மன்­றத் தேர்­த­லுக்­கான வாக்­குப்­ப­திவு நேற்று காலை ஏழு மணிக்­குத் தொடங்­கி­யது முதல் விறு­வி­றுப்­பாக நடை­பெற்று வந்­தது.

இரு மாநி­லங்­க­ளி­லும் மக்­கள் ஆர்­வத்­து­டன் நீண்ட வரிசை களில் நின்று தங்­க­ளது வாக் கினைப் பதிவு செய்­த­னர்.

வாக்­குப்­ப­திவு இந்­திய நேரப்­படி மாலை 4 மணி­யு­டன் நடை­பெற்று முடிந்த நிலை­யில், 3 மணி நில­வ­ரப்­படி நாகா­லாந்­தில் 72.99 விழுக்­கா­டும் மேகா­லயாவில் 63.91 விழுக்­காடு வாக்குகளும் பதி­வாகி இருந்­தன.

இதனிடையே, மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறை வேற்றும்படி பிரதமர் மோடி டுவிட் டர் பதிவில் வலியுறுத்தி இருந் தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, இரு மாநில வாக்காளர்களிடமும் நாட்டில் நல்ல மாற்றம் ஏற்பட ஒரு வாய்ப்பை வழங்குமாறு வேண்டு கோள் விடுத்தார்.

இரு மாநில மக்களும் முற்போக்கான, நலன் சார்ந்த அரசாங்கங்களை விரும்புவ தாகவும் கார்கே கூறினார்.

மேகா­லயா மாநி­லத்­தில் மொத்­த­முள்ள 60 தொகு­தி­களில் 375 வேட்­பா­ளர்­கள் போட்­டி­யிடுகின்­ற­னர். இதில் சோஹி­யாங் தொகு­தி­யில் ஒரு வேட்­பா­ளர் உயி­ரி­ழந்­த­தால் 59 தொகுதிகளுக்கு வாக்­குப்­ப­திவு நடை­பெறுகிறது. இங்கு 21.6 லட்­சம் வாக்­கா­ளர்­கள் உள்­ள­னர்.

நாகா­லாந்­தில் மொத்­தம் உள்ள 60 தொகு­தி­களில் 184 வேட்­பா­ளர்­கள் களத்­தில் உள்­ள­னர். இதில் பாஜக ஓர் இடத்­தில் போட்­டி­யின்றி வெற்றி பெற்­றுள்­ளது. இத­னால் 59 தொகு­தி­க­ளுக் குத் தேர்­தல் நடை­பெ­று­கிறது.

மார்ச் 2ல் வாக்கு எண்­ணிக்கை

திரி­பு­ரா­வில் கடந்த 16ஆம் தேதி ஒரே கட்­ட­மாக தேர்­தல் நடை­பெற்ற நிலை­யில், திரி­புரா, மேகா­லயா, நாகா­லாந்து ஆகிய மூன்று மாநில சட்­டப்­பே­ரவை தேர்­தல்­க­ளி­லும் பதி­வா­கும் வாக்­கு­கள் மார்ச் 2ஆம் தேதி எண்­ணப்­பட்டு, அன்­றைய தினமே முடி­வு­கள் அறி­விக்­கப்­படும்.