நாடு தழுவிய போராட்டத்தில் ஆம் ஆத்மி; அடுத்தது கெஜ்ரிவால்தான் என்கிறது பாஜக 8 மணி நேர விசாரணையில் துணை முதல்வர் மணீஷ் கைது

நாடு தழுவிய போராட்டத்தில் ஆம் ஆத்மி; அடுத்தது கெஜ்ரிவால்தான் என்கிறது பாஜக 8 மணி நேர விசாரணையில் துணை முதல்வர் மணீஷ் கைது

2 mins read
4e7356be-8771-4e24-a62b-f8d2d801b1ee
-

புது­டெல்லி: டெல்லி துணை முதல்­வ­ரும் நிதி அமைச்­ச­ரு­மான மணீஷ் சிசோ­டி­யாவை எட்டு மணி நேர விசா­ர­ணைக்­குப் பிறகு மத்­தி­யப் புல­னாய்­வுத் துறை (சிபிஐ) காவ­லர்­கள் கைது செய்­த­னர்.

இந்­தக் கைது நட­வ­டிக்­கை­யைக் கண்­டித்து ஆங்­காங்கே உருவ பொம்­மை­களை எரித்­தும் பாஜகவுக்கு எதி­ராக கண்­டன முழக்கமிட்­டும் நேற்று நாடு தழு­விய அள­வில் ஆம் ஆத்மி கட்சி­யி­னர் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னர்.

சிசோ­டி­யா­வின் கைது நட வடிக்கைக்கு கண்­ட­னம் தெரி­வித்­துள்ள டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால், "ஆதா­ரங்­கள் எது­வும் இல்­லாத நிலை­யில், அர­சி­யல் அழுத்­தம் கார­ண­மாக மணீஷை கைது செய்ய சிபிஐ அதி­கா­ரி­கள் நிர்­ப்பந்­திக்­கப்­பட்­டு உள்ளனர்," என்று தெரி­வித்­தார்.

பஞ்­சாப் மாநில முதல்­வர் பக­வந்த் மானும் கெஜ்­ரி­வா­லும் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது, "இது இந்­திய ஜன­நா­ய­கத்­தின் கறுப்பு நாள்," என்று கூறி­னர்.

ஏழைக் குழந்­தை­க­ளுக்குத் தர­மான கல்வி கிடைக்க பாடு­பட்­ட­வரை, தேசத்­தின் மீது அக்­கறை­ உள்­ள­வரை பாஜக அரசு கைது செய்­தி­ருப்­பதை மக்­கள் கவ­னித்­துக்கொண்டிருப்­ப­தாக கெஜ்­ரி­வால் கூறி­னார்.

இத­னி­டையே, இது­பற்றி டுவிட் செய்­துள்ள பாஜக நிர்­வாகி கபில் மிஸ்ரா, "கெஜ்­ரி­வால், மணீஷ் சிசோ­டியா, சத்­யேந்­தர் ஜெயின் ஆகி­யோர் கைது செய்­யப்­படுவார்­கள் என்று ஆரம்­பம் முதலே நான் கூறி­வந்­தேன். இப்­போது சத்­யேந்­தர் ஜெயி­னும் மணீஷ் சிசோ­டி­யா­வும் கைது செய்­யப்பட்­டு­விட்­ட­னர். அடுத்­தது கெஜ்ரிவால் கைது செய்­யப்­ப­டு­வார்," என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

டெல்­லி­யில் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021ல் புதிய மது­பா­னக் கொள்­கையை அமல்­ப­டுத்­தி­யது.

இதை­ய­டுத்து 800க்கும் மேற்­பட்ட தனி­யார் நிறு­வ­னங்களுக்கு மது­பா­னம் விற்­பனை செய்ய உரி­மம் வழங்­கப்­பட்­டது.

அதில் முறை­கே­டு­கள் நடந்த தாகப் புகார் எழுந்­த­தால் சிபிஐ விசா­ர­ணைக்கு உத்­த­ர­வி­டப்பட்­டது. இவ்­வி­வ­கா­ரம் தொடர்பாக சிபிஐ தலை­மை­ய­கத்­தில் முன்­னி­லை­யான மணீஷ் சிசோடியாவிடம் புதிய மது­பா­னக் கொள்கை, குற்­றம் சாட்­டப்­பட்டுள்­ள­வர்­க­ளு­டன் உள்ள தொடர்பு, தொலை­பேசித் தக­வல் பரி­மாற்­றங்­கள் குறித்து அதி­கா­ரி­கள் கேள்வி எழுப்­பி­னர்.

அதற்கு அவர் அளித்த பதி­லில் திருப்தி இல்லை என்­றும் முக்­கிய கேள்­வி­க­ளுக்கு தெளி வான பதி­லைக் கூற­வில்லை என்­றும் கூறி அவரைக் கைது செய்தனர். டெல்லி அரசு வரவு செல­வுத் திட்­டத்தை தாக்­கல் செய்­ய­வுள்ள நிலை­யில், அதன் நிதி அமைச்­சர் மணிஷ் சிசோ டியாவை சிபிஐ கைது செய்திருப்­பது அர­சி­யல் அரங்­கில் சர்ச்­சையை ஏற்­ப­டுத்தி உள்­ளது.