20 ஆண்டில் முதல்முறையாக இளவரசா்-இளவரசி வருகை

20 ஆண்டில் முதல்முறையாக இளவரசா்-இளவரசி வருகை

1 mins read
376c58b3-7d15-4ee5-8e07-7b8656b46957
-

புது­டெல்லி: டென்­மாா்க் நாட்­டின் பட்­டத்து இள­வ­ரசா் ஃபிரடெ­ரிக் ஆன்ட்ரே ஹென்­றி கிறிஸ்­டி­ய­னும் பட்­டத்து இள­வரசி மேரி எலி­ச­பெத்­தும் ஐந்து நாள் ­ப­ய­ண­மாக இந்­தி­யா­வுக்கு வருகை தந்­துள்­ள­னர்.

இது­தொ­டர்­பாக வெளி­யு­றவு அமைச்சு வெளி­யிட்­டுள்ள செய்­திக் குறிப்­பில், கடந்த இரண்டு தசாப்­தங்­களில் (20 ஆண்­டு­களில்) டென்­மார்க் நாட்டு அரச குடும்­பம் முதல்­மு­றை­யாக இந்­தியா வந்­துள்­ளது. அவர்­க­ளது வருகை இந்­திய-டென்­மார்க் நாடு­க­ளின் நெருங்­கிய நட்­பு­றவை வலுப்­ப­டுத்­த­வும் மேம்­ப­டுத்­த­வும் உத­வும் என­த் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தப் பய­ணத்­தின்­போது அதி­பர் திரெ­ள­பதி முா்மு, துணை அதி­பர் ஜக­தீப் தன்கா் ஆகியோரையும் அரச தம்­ப­தி­யர் சந்­திக்க உள்ளனா்.