எட்டு கோடி விவசாயிகள் கணக்கில் தலா ரூ.2,000

எட்டு கோடி விவசாயிகள் கணக்கில் தலா ரூ.2,000

1 mins read
eb6bc062-6550-49ea-aeef-a1f51c1b54d2
'பிர­த­மர் கிஷான்' என்று அழைக்­கப்­படும் இந்தத் திட்­டத்­தின்­கீழ், நாடு முழு­வ­தும் உள்ள ஏறக்குறைய எட்டு கோடி விவ­சா­யி­க­ளுக்கு 13வது தவ­ணை­யாக தலா ரூ.2,000 நிதி­யு­த­வி அவர்­க­ளது வங்­கிக் கணக்­கில் போடப்­பட்­டது. படம்: ராய்ட்டர்ஸ் -

புதுடெல்லி: எட்டு ேகாடிக்­கும் அதி­க­மான விவ­சா­யி­க­ளுக்கு உத­வும் வகை­யில், அவர்­க­ளது வங்­கிக் கணக்­கில் நேர­டி­யாக 16,800 கோடி ரூபாயை போடும் திட்­டத்தை நேற்று பிர­த­மர் நரேந்­திர மோடி தொடங்­கி­வைத்­தார்.

'பிர­த­மர் கிஷான்' என்று அழைக்­கப்­படும் இந்தத் திட்­டத்­தின்­கீழ், நாடு முழு­வ­தும் உள்ள ஏறக்குறைய எட்டு கோடி விவ­சா­யி­க­ளுக்கு 13வது தவ­ணை­யாக தலா ரூ.2,000 நிதி­யு­த­வி அவர்­க­ளது வங்­கிக் கணக்­கில் போடப்­பட்­டது.

கடந்த 2019ல் தொடங்­கப்­பட்ட இத்திட்­டத்­தின் அடிப்­ப­டை­யில், விவ­சா­யி­க­ளுக்கு ஆண்­டு­தோறும் ரூ.6,000 நிதியுதவி வழங்­கப்­ப­டு­கிறது. இது நான்கு மாதங்­க­ளுக்கு ஒரு­முறை ரூ.2,000 வீதம் மூன்று தவ­ணை­களா­கக் கொடுக்­கப்­ப­டு­கிறது. தற்­போது வரை இத்­திட்­டம் மூலம் 11 கோடிக்­கும் அதி­க­மான விவ­சா­யி­கள் பல­ன­டைந்­துள்­ள­னர்.