திருமண வரவேற்பில் நடனமாடிய இளையர் பலி

திருமண வரவேற்பில் நடனமாடிய இளையர் பலி

1 mins read
3c70fd98-3336-43ff-b7ef-8e0c7d6e303e
-

தெலுங்­கானா: தன் நண்­ப­ரின் திரு­மண வர­வேற்பு நிகழ்ச்­சி­யில் துடிப்புடன் நட­ன­மாடிக்கொண்­டி­ருந்த 19 வயது இளையர் ஒரு வர் திடீரென சுருண்டு விழுந்து உயி­ரி­ழந்தார்.

இந்தச் சம்பவம் திருமண வர­வேற்பு நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­ற­வர்­கள் மத்­தி­யில் சோகத்தை ஏற்­ப­டுத்­தியுள்ளது.

தெலுங்­கானா மாநி­லம், நிர்­மல் மாவட்­டத்­தில் அமைந்­துள்ள கமோல் கிரா­மத்­தில் கிருஷ்­ணையா என்­ப­வ­ரது மக­னின் திரு­மண வர­வேற்பு நிகழ்ச்சி நடை­பெற்­றது. இதில் மஹா­ராஷ்­டி­ரா­வைச் சேர்ந்த மண­ம­க­னின் நெருங்­கிய உற­வி­ன­ரும் நண்­ப­ரு­மான 19 வயது இளை­ஞர் முத்­தி­யம் கலந்­து­கொண்டு சினிமா பாட­லுக்கு நட­ன­மா­டிக்கொண்­டி­ருந்­தார். அப்­போது முத்­தி­யம் திடீரென மயங்கி விழுந்­தார். உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்று பரி­சோ­தித்­த­போது ஏற்­கெனவே அவர் இறந்­து­விட்­ட­தாக மருத்­து­வர்­கள் கூறினர்.