'விரைவில் இந்தியாவில் விமானங்கள் தயாரிக்கப்படும்'

'விரைவில் இந்தியாவில் விமானங்கள் தயாரிக்கப்படும்'

1 mins read
6d70943f-58df-4eb4-929d-dd43eb2a1ca0
வரும் 2047ஆம் ஆண்­டுக்­குள் வளர்ந்த நாடாக மாற­வேண்­டும் என்ற இலக்கை இந்­தியா அடைய தொழில்­நுட்­பப் பயன் பாடு பெரி­தும் உத­வும். படம்: பிக்ஸாபே -

ஷிவ­மொக்கா: அனைத்­து­லக அள­வில் வேக­மாக முன்­னேறி வரும் இந்­தி­யா­வுக்கு நூற்­றுக்­கணக்­கான விமான நிலை­யங்­கள், ஆயி­ரக்­க­ணக்­கான விமா­னங்­கள் தேவைப்­ப­டு­கின்­றன.

இந்­தச் சவா­லைச் சமாளிக்­கும் வகை­யில், இந்­தி­யா­வின் தயா­ரிப்­பாக பய­ணி­கள் விமா­னம் உரு­வா­கும் நாள் வெகு தொலை­வில் இல்லை என்று பிர­த­மர் நரேந்­திர மோடி கூறி­யுள்­ளார்.

450 கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்ட நவீன கிரீன்­ஃபீல்ட் விமான நிலை­யத்தை கர்­நா­டக மாநி­லம், ஷிவ­மொக்­கா­வில் திறந்­து­வைத்து பேசிய அவர், வரும் நாள்­களில் இந்­தி­யா­விற்கு ஆயி­ரக்­க­ணக்­கான விமா­னங்­கள் தேவைப்­படும் என்­றும் 'மேட் இன் இந்­தியா' விமா­னங்­கள் தயா­ரிக்­கப்­ப­டு­வது விரை­வில் சாத்­தி­ய­மா­கும் என்­றும் கூறி­னார்.

"வரும் 2047ஆம் ஆண்­டுக்­குள் வளர்ந்த நாடாக மாற­வேண்­டும் என்ற இலக்கை இந்­தியா அடைய தொழில்­நுட்­பப் பயன் பாடு பெரி­தும் உத­வும்

"இந்­தியா தற்­போது விமா­னங்­களை இறக்­கு­மதி செய்து வரு­கிறது. ஆனால் சாதா­ரண குடி­மக்­களும் 'மேட் இன் இந்­தியா' பய­ணி­கள் விமா­னங்களில் பறக்­கும் நாள் வெகு தொலை­வில் இல்லை. 'ஹவாய்' காலணி அணிந்­த­வர்­களும் அதிநவீன விமா­னத்­தில் பறக்கவேண்­டும். அது­போன்ற சூழலை இப்­போதே நான் மகிழ்ச்­சி­யோடு பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றேன்," என்று பிர­த­மர் மோடி பேசி­னார்.