சதி: ஐஎஸ்ஐஎஸ் சந்தேக நபர்கள் ஏழு பேருக்கு மரண தண்டனை

1 mins read
630e6ebd-ec33-4793-9b1f-5cca083529fa
பயங்­க­ர­வா­தச் செயல்­களை அரங்­கேற்ற சதித்­திட்­டம் போட்ட­தன் தொடர்­பில் அவர்­கள் 2017ஆம் ஆண்டு கான்­பூ­ரில் கைது செய்­யப்­பட்­ட­னர். படம்: பிக்ஸாபே -

லக்னோ: இந்­தி­ய­ாவின் உத்­த­ரப் பிர­தேச லக்னோ சிறப்பு என்­ஐஏ நீதி­மன்­றம், ஐஎஸ்­ஐ­எஸ் போரா­ளி­கள் என்று சந்­தே­கிக்­கப்­பட்ட ஏழு பேருக்கு மரண தண்­டனை விதித்­தது.

மற்­றொ­ரு­வ­ருக்கு ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. கான்­பூர் பயங்­க­ர­வாத சதித்­திட்­டம் தொடர்­பில் அவர்­க­ளுக்­குத் தண்­டனை கிடைத்­தது.

பயங்­க­ர­வா­தச் செயல்­களை அரங்­கேற்ற சதித்­திட்­டம் போட்ட­தன் தொடர்­பில் அவர்­கள் 2017ஆம் ஆண்டு கான்­பூ­ரில் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­க­ளுக்கு எதி­ராக அதே ஆண்டு மார்ச் 8ஆம் தேதி வழக்கு பதி­யப்­பட்­டது.

வழக்கை விசா­ரித்த சிறப்பு என்­ஐஏ நீதி­மன்­றம், குற்­ற­வா­ளி­களுக்கு கடும் தண்­டனை விதிப்­பதை தவிர வேறு வழி­யில்லை என்று தெரி­வித்­தது.

தண்­டனை விதிக்­கப்­பட்ட பயங்­க­ர­வாத ஐஎஸ்­ஐ­எஸ் சந்­தேக நபர்­கள், நாடு முழு­வ­தும் குண்டு வெடிப்­பு­க­ளை­அ­ரங்­கேற்ற சதித்­திட்­டம் தீட்டி இருந்­த­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்து இருந்­த­னர்.

மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட ஏழு பேரும் குற்­ற­வா­ளி­கள் என்று நீதி­மன்­றம் முடிவு செய்­தது.

அவர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது என்றும் எட்டாவது நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அர­சாங்க வழக்­கு­ரை­ஞர் கேகே சர்மா நேற்று தெரிவித்தார்.