புதுடெல்லி: ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஒன்பது மாதங்களாக சிறையில் இருக்கும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகிய இருவரும் பதவி விலகினர்.
மனீஷ் சிசோடியா, கல்வி, நிதி, கலால் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சராகவும் செயல்பட்டார். அவர் கைதானதால் கொந்தளித்த ஆம் ஆத்மி கட்சியினர் தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

