18 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்; மகாராஷ்டிராவிலும் ஆய்வு இருமல் மருந்தில் கலப்படம் செய்த ஐவர் பிடிபட்டனர்

18 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்; மகாராஷ்டிராவிலும் ஆய்வு இருமல் மருந்தில் கலப்படம் செய்த ஐவர் பிடிபட்டனர்

2 mins read
7f5c95ec-cb79-4bec-b4b0-b98a4396622c
-

நொய்டா: உஸ்­பெ­கிஸ்­தான் நாட்­டில் இரு­மல் மருந்து குடித்த 18 குழந்­தை­கள் உயி­ரி­ழந்த விவ காரம் தொடர்­பில், உத்­த­ரப்­பிர தேசத்தில் செயல்­பட்டு வந்த இரு­மல் மருந்து தயாரிப்பு நிறு­வ­னத்­தின் மூன்று ஊழி­யர்­கள், இரண்டு இயக்­கு­நர்­களைக் நொய்டா காவ லர்கள் கைது செய்தனர்.

ஜெயா ஜெயின், சச்­சினி ஜெயின் ஆகிய இரு இயக்கு நர்­கள் மீதும் மருந்து தயா­ரிப்­பில் முறை­கேடு, மருந்­து­களை மாற்றி விற்­பனை செய்­தது தொடர்­பில் வழக்குப் பதி­வாகி உள்­ளது.

இந்­தி­யா­வின் 'மேரி­யன் பயோ­டெக்' நிறு­வ­னத் தயா­ரிப்­பான 'டோக்-1 மேக்ஸ்' என்ற இரு­மல் மருந்தை எடுத்­துக்­கொண்ட உஸ்­பெ­கிஸ்­தான் நாட்­டைச் சேர்ந்த 18 குழந்­தை­கள் இறந்­த­தாக அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு கடந்தாண்டு குற்­றம்­சாட்­டி­யது.

அத்­து­டன், அந்த மருந்­து­களை­ ஆய்வு செய்­த­தில் 'எத்­தி­லீன் கிளைக்­கோல்' ரசா­ய­னம் அதி­கம் இருப்­பது தெரி­ய­வந்­தது.

இந்­நி­லை­யில், ஐவரை நொய்டா காவல்­து­றை­யி­னர் கைது செய்துள்ளனர்.

இத­னி­டையே, மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில் ஆறு இரு­மல் மருந்து உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளின் உரி­மம் தற்­கா­லி­க­மாக ரத்து செய்­யப்­பட்­டுள்­ள­தாக அம்­மா­நில உணவு, மருந்து நிர்­வா­கத்­துறை அமைச்­சர் சஞ்­சய் ரத்­தோட் தெரி­வித்­துள்­ளார்.

தங்­கள் மாநி­லத்­தில் இரு­மல் மருந்து தயாரித்து வரும் 108 நிறு­வ­னங்­களில் 84ல் ஆய்வு மேற்­கொண்­ட­தா­க­வும் அவற்றில் ஆறு நிறு­வ­னங்­களின் உரி­மங்­கள் தற்­கா­லி­க­மாக ரத்து செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் அமைச்­சர் சஞ்­சய் கூறியுள்ளார்.

இந்­நி­லை­யில், ஏற்­கெ­னவே ஆப்­பி­ரிக்க நாடான காம்­பி­யா­வில் இந்­தி­ய இரு­மல் மருந்­தால் 66 குழந்­தை­கள் உயி­ரி­ழந்­த­தாக கடந்த அக்­டோ­ப­ரில் சா்ச்சை எழுந்­தது.

இந்த மர­ணம் தொடர்­பாக, இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­பட்ட இரு­மல் மருந்து குறித்து அமெ­ரிக்­கா­வின் நோய் கட்­டுப்­பாடு, தடுப்பு மையங்­கள் (சிடிசி), காம்­பி­யன் சுகா­தார அதி­கா­ரி­களால் கூட்டு ஆய்வு நடத்­தப்­பட்­டது. விசா­ரணை அறிக்­கை­யின்­படி, காம்­பி­யா­வில் குழந்­தை­கள் இறப்­புக்­கும் தர­மற்ற இரு­மல் மருந்­துக்­கும் முக்­கிய தொடர்பு இருப்­ப­தாகத் தெரி­ய­வந்­துள்­ளது.

காம்­பி­யா­வில் இறக்­கு­மதியான டைதி­லீன் கிளை­க்கோல் அல்­லது எத்­தி­லீன் கிளைக்­கோல் கொண்ட மருந்­து­க­ளால் குழந்­தை­க­ளி­டையே கடு­மை­யான சிறு­நீ­ர­கப் பாதிப்­புக்கு வழி­வ­குத்­த­தா­க­வும் பிடிஐ ஊட­கத் தக­வல் குறிப்­பிட்­டுள்­ளது.