அயோத்தியில் பள்ளிவாசலுக்கு அனுமதி

அயோத்தியில் பள்ளிவாசலுக்கு அனுமதி

1 mins read
995be272-c726-4fbd-a154-30277861598a
-

அயோத்தி: உத்­த­ரப் பிர­தேச மாநி­லம் அயோத்­தி­யில் தன்­னிப்­பூர் பள்­ளி­வா­ச­லைக் கட்­டு­வ­தற்கு இறுதி ஒப்­பு­தல் கிடைத்­துள்­ளது.

'பாபர் மசூதி-ராம ஜென்ம பூமி' குறித்த தீர்ப்­பில் உச்ச நீதி­மன்­றம் குறிப்­பிட்­ட­தற்கு ஏற்ப இந்த பள்ளிவாசலைக் கட்ட, அயோத்­தியா மேம்­பாட்டு ஆணை­யம் ஒப்­பு­தல் அளித்து இருக்கிறது.

மாநில அர­சாங்­கம் வழங்­கும் ஐந்து ஏக்­கர் நிலத்­தில் பள்­ளி­வாசல், மருத்­து­வ­மனை, ஆய்­வுக் கழ­கம், சமூக அள­வி­லான சமை­ய­லறை, நூல­கம் ஆகி­யவை கட்­டப்­படும். இந்தோ-இஸ்­லா­மி­யக் கலா­சார அற­நி­று­வ­னம் (ஐஐ­சி­எஃப்) இந்­தப் பணியை மேற்­கொள்­ளும்.

ஆணை­யத்­தின் அனு­மதி கிடைக்­கா­த­தால், ஈராண்­டு­களுக்கு மேலாக இந்­தக் கட்­டு­மா­னப் பணி தொடங்­கப்படாமல் இருந்­தது.

இந்­நி­லை­யில், "தன்­னிப்­பூர் பள்­ளி­வா­சல் கட்­டு­மா­னத் திட்­டத்­திற்கு ஒப்­பு­தல் அளித்­துள்­ளோம். அனு­ம­திக்­கப்­பட்ட வரை­ப­டங்­கள் உள்­ளிட்­டவை துறை ரீதி­யான நட­வ­டிக்­கை­க­ளுக்­குப் பிறகு ஐஐ­சி­எஃப் வசம் ஒப்­ப­டைக்­கப்­படும்," என்று அயோத்­தியா மண்­டல ஆணை­யர் கௌரவ் தயாள் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

ஆணை­யத்­தின் இறுதி ஒப்­பு­த­லுக்­குப் பிறகு அற­நி­று­வ­னம் ஒரு கூட்­டத்தை நடத்­தும் என்­றும் அதில் பள்­ளி­வா­ச­லின் கட்­டு­மா­னத்­துக்­கான இறுதி வரை­ப­டம் தீர்­மா­னிக்­கப்­படும் என்­றும் ஐஐ­சி­எஃப் தெரி­வித்­தது.

தன்­னிப்­பூர் பள்­ளி­வா­சல், அயோத்தி ராமர் கோயி­லில் இருந்து 22 கிலோ­மீட்­டர் தொலை­வில் அமைந்­தி­ருக்­கும்.

அயோத்தியில் முன்பு இருந்த பாபர் மசூ­தி­யை­விட அது அளவில் பெரி­தாக இருக்­கும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சர்ச்­சைக்­கு­ரிய இடத்­தில் ராமர் கோயி­லைக் கட்­ட­வும் மாநில அரசு வழங்­கும் இடத்­தில் பள்­ளி­வா­சலைக் கட்டும்படியும் 2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.