தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய தனி நபர் வருமானம் இரட்டிப்பாக அதிகரிப்பு

2 mins read
7abcb300-7287-4efc-aa33-688c74227c49
-

பொருளியல் நிபுணர்கள்: வருமான விநியோகத்தில் உள்ள சீரற்ற நிலை பெரும் சவால்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் தனி நபர் வரு­மா­னம் இரட்­டிப்­பாக உயர்ந்­துள்­ளது. எனி­னும், வரு­மான விநி­யோ­கத்­தில் சீரற்ற நிலை நிலவி வரு­கிறது என்­றும் அர­சாங்­கத்­துக்கு இது சவா­லாக நீடித்து வரு­கிறது என்­றும் நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கடந்த 2014ஆம் ஆண்டு பிர­த­மர் நரேந்­திர மோடி தலை­மை­யி­லான தேசிய ஜன­நா­யக கூட்­டணி ஆட்­சிப் பொறுப்பை ஏற்ற பின்­னர் தனி நபர் ஆண்டு வரு­மா­னம், ரூ.172,000ஆக அதி­க­ரித்­துள்­ளது என நிபு­ணர்­களை மேற்­கோள் காட்டி பிடிஐ செய்தி முகைமை செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

கடந்த 2014-15 நிதி­யாண்­டுக் காலத்­தில் தனி நபர் வரு­மா­னம், ரூ.86,647ஆக இருந்த நிலை­யில், 2022-23ஆம் ஆண்­டில் அது ரூ.172,000ஆக அதி­க­ரித்­துள்­ள­தாக தேசிய புள்ளி விவர அலு­வ­ல­கத் தர­வு­கள் தெரி­விக்­கின்­றன. இது சுமார் 99 விழுக்­காடு வளர்ச்­சி­யா­கும்.

எனி­னும், பண வீக்­கத்தை கவ­னத்­தில் கொள்­ளும்­போது, தனி நபர் வரு­மா­னம் ஏறக்­கு­றைய 35 விழுக்­காடு வரை அதி­க­ரித்­துள்­ளது.

அதா­வது, 2014-15 நிதி­யாண்­டில் ரூ.72,805ஆக இருந்த வரு­மா­னம், இப்­போது ரூ.98,118ஆக உள்­ளது.

மொத்த உள்­நாட்டு உற்­பத்தி அடிப்­ப­டை­யி­லான புள்ளிவிவ­ரங்­க­ளைப் பார்க்­கும்­போது, வரு­மா­னம் உயர்ந்­துள்­ளது என்­றும் பண­வீக்க அடிப்­ப­டை­யில் கணக்­கி­டும்­போது வரு­மான அளவு மேலும் குறை­யக்­கூ­டும் என்­றும் சொல்­கி­றார் பொரு­ளி­யல் நிபு­ண­ரான ஜயாத்தி கோஷ்.

மேலும், வரு­மா­னப் பகிர்வு என்­பது மிக முக்­கி­ய­மான அம்­சம் என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டு­

கி­றார்.

"நாட்­டின் மக்­கள்தொகை அடிப்­ப­டை­யில், மேல்­தட்­டில் உள்ள பத்து விழுக்­காட்­டி­ன­ரின் வரு­மா­னம்­தான் நன்கு அதி­க­ரித்­துள்­ளது.

அதற்கு நேர்­மா­றாக, மற்ற பிரி­வி­ன­ரின் சரா­சரி வரு­மா­னம் வீழ்ச்சி அடைந்­துள்­ளது.

"உண்மை நில­வர அடிப்­ப­டை­யில் பார்க்­கும்­போது, இந்த வரு­மான வீழ்ச்­சி­யா­னது, மேலும் அதி­க­மாக இருக்­கக்­கூ­டும்," என்று முன்­னாள் பேரா­சி­ரி­ய­ரான ஜயாத்தி கூறு­கி­றார்.

கொரோனா நெருக்­கடி காலத்­தில் தனி நபர் வரு­மா­னம் வீழ்ச்சி கண்­டது என்றபோதி­லும், 2021-22 மற்­றும் 2022-23க்கான நிதி­யாண்­டு­களில் வரு­மா­னம் அதி­க­ரித்­துள்­ளது என்று சுட்­டிக்­காட்­டு­கி­றார் தேசிய பொரு­ளியல் ஆராய்ச்சி நிறு­வ­னத்­தின் முன்­னாள் இயக்­கு­ந­ரான பினாக்கி சக்­ர­போர்தி.

கடந்த 2014-19 வரை­யி­லான கால­கட்­டத்­தில் தனி நபர் வரு­மா­னம், சரா­ச­ரி­யாக 5.6 விழுக்­காடு அதி­க­ரித்து வந்­த­தாக அவர் கூறு­கி­றார்.

"இந்த வளர்ச்சி குறிப்­பி­டத்­தக்­கது. சுகா­தா­ரம், கல்வி, பொரு­ளா­தா­ரம், சமூக மேம்­பாடு உள்­ளிட்ட அம்­சங்­களில் முன்­னேற்­றம் காணப்­ப­டு­கிறது.

"கொரோனா தொற்­றுப்­ப­ர­வ­லின் தாக்­கம் மிக மோச­மாக இருந்தபோதி­லும், நாட்­டின் பொரு­ளா­தா­ரம் குறிப்­பிட்ட வளர்ச்­சி­யைக் கண்­டுள்­ளது.

தகுந்த மறு­ப­கிர்­வுக் கொள்­கை­களை வகுப்­ப­து­டன், தனி­ந­பர் வரு­மான வளர்ச்­சியை ஆண்டுக்கு ஐந்து முதல் ஆறு விழுக்­காடு வரை நிலை­நி­றுத்­து­வது பொரு­ளியல் வளர்ச்­சி­யைத் தக்­க­வைக்க உத­வும்," என்­கி­றார் பினாக்கி சக்­ர­போர்தி.