வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகள்

1 mins read
f49fcde6-ce69-4010-ba42-5f36e6f7cc05
தெலுங்­கா­னா­வில் கூடு­தல் வர தட்­ச­ணை கேட்ட மண­ம­கள், கிடைக்­கா­த­தால் திரு­ம­ணத்தை நிறுத்­தி­விட்­டார். படம்: பிக்ஸாபே -

திருப்­பதி: தெலுங்­கா­னா­வில் கூடு­தல் வர தட்­ச­ணை கேட்ட மண­ம­கள், கிடைக்­கா­த­தால் திரு­ம­ணத்தை நிறுத்­தி­விட்­டார். ஐத­ரா­பாத்தை அடுத்­துள்ள போச்­சா­ரம் பகு­தியைச் சேர்ந்த வாலி­ப­ருக்­கும் அஸ்­வரா பேட்டை பழங்­கு­டி­யி­னத்­தைச் சேர்ந்த இளம் பெண்­ணுக்கும் திரு­ம­ணம் நிச்­ச­யிக்­கப்­பட்­டது.

பழங்­கு­டி­யி­னர் வழக்­கப்­படி தங்­கள் வீட்­டிற்கு வரும் மரு­ம­க­ளுக்கு மண­ம­கன் வீட்­டார் வர­தட்­சணை கொடுக்க வேண்­டும் என்­பது வழக்­கம். அதன்­படி மண­ம­க­ளுக்கு மாப்­பிள்ளை வீட்­டார் ரூ.2 லட்­சம் வர­தட்­ச­ணை­யாகக் கொடுத்­த­னர். சென்ற வெள்­ளிக் கிழமை மண­ம­கன் திரு­மண உடை­யில் மண­மே­டைக்கு வந்­தார். ஆனால் மண­ம­கள் வீட்­டார் யாரும் திரு­மண மண்­ட­பத்­திற்கு வர­வில்லை. இத­னால் அதிர்ச்சி அடைந்த மண­ம­கன் வீட்­டார் மண­ம­கள் தங்கி இருந்த ஹோட்­ட­லுக்கு சென்று திரு­மண மண்­ட­பத்­திற்கு வரு­மாறு அழைப்பு விடுத்­த­னர். அப்­போது, கூடு­தல் வர­தட்­சணை கொடுத்­தால் மட்­டுமே திரு­மண மண்­ட­பத்­திற்கு வர முடி­யும் என பிடி­வா­த­மாக மண­ம­கள் தெரி­வித்­தார். இத­னால் திரு­ம­ணம் நின்­றது. இதை­ய­டுத்து மண­ம­க­ளுக்குக் கொடுக்கப்பட்டிருந்த ரூ.2 லட்­சத்தை மண­ம­கன் வீட்­டார் கேட்டு வாங்­கிச் சென்று விட்­ட­னர்.