தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஜப்பான் பெண்ணிடம் அத்துமீறல்

1 mins read
b2e4c821-bd49-4991-9d65-9afda3529bd7
-

புது­டெல்லி: வண்­ணச் சாயங்­க­ளை­யும் வண்ண வண்ண தூள் களை­யும் ஒரு­வர் மீது ஒரு­வர் பூசி, வீசி கொண்­டா­டப்­படும் ஹோலி பண்­டி­கை­யின்­போது சில இளை­யர்­கள் அத்­து­மீறி நடந்­துள்­ள­னர். இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் சிறு­வன் உட்­பட மூவர் கைதா­கி­யுள்­ள­னர்.

அண்மையில் ஹோலி பண்­டிகை வெகு­வி­ம­ரி­சை­யா­கக் கொண்­டப்­பட்­டது. அப்­போது, வண்­ணப்­பொ­டி­களைத் தூவி­யும், வண்­ணம் கலந்த தண்­ணீரை பிறர் மீது தெளித்­தும் பலர் உற்­சா­க­மாக தங்­க­ளு­டைய ஹோலி மகிழ்ச்­சி­யைப் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

இந்­தி­யா­வுக்குச் சுற்­றுலா வந்­துள்ள வெளி­நா­டு­க­ளைச் சேர்ந்த சுற்­று­லாப் பய­ணி­களும் பல்­வேறு இடங்­களில் நடந்த ஹோலி கொண்­டாட்­டத்­தில் பங்­கேற்­ற­னர்.

இந்­நி­லை­யில், தலை­ந­கர் டெல்­லி­யில் பகர்­கஞ்ச் பகு­தி­யில் உள்­ளூர்­வா­சி­களும் வெளி­நாடுகளைச் சேர்ந்த சுற்­றுலாப் பயணி­களும் சேர்ந்து ஹோலி கொண்­டாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். அப்­போது, ஜப்­பானைச் சேர்ந்த இளம் பெண்­ணி­டம் சில இளை­யர்­கள் பாலி­யல் ரீதி­யில் அத்­து­மீ­ற­லில் ஈடு­பட்­ட­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

அந்தப் பெண் மீது முட்­டையை வீசி, வண்­ணப் பொடி­களை முகத்­தில் பூசி அவர்­கள் அத்­து­மீ­றி­யி­ருப்­ப­தா­கக் கூறப் ­ப­டு­கிறது. ஓர் இளை­யர், அந்த இளம்­பெண் தலை­யில் அடித்­து­விட்­டுச் சென் ­றார். இது தொடர்­பான காணொளி சமூக ஊட­கங்­களில் பர­வி­யது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக பாதிக்­கப்­பட்ட வெளி­நாட்டுப் பயணி புகார் அளிக்­க­வில்லை. ஆனால், சமூக ஊட­கங்­களில் பர­விய காணொ­ளியை அடிப்படை­யா­கக் கொண்டு காவல் துறை­யி­னர் தாமாக முன்­வந்து வழக்­குப்­ப­திவு செய்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து வெளி­நாட்டுப் பெண்­ணி­டம் அத்­து­மீறி நடந்­து­கொண்ட ஒரு சிறு­வன் உள்­பட மூன்று பேரைக் காவல்­ துறை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.