ஆளுநர், அரசுக்கு இடையே நீடிக்கும் கருத்து மோதல்

ஆளுநர், அரசுக்கு இடையே நீடிக்கும் கருத்து மோதல்

2 mins read
b98b604d-2d69-44b1-bd17-b24268c1c807
-

மும்பை: இணைய சூதாட்­டத்தை தடை செய்­வ­தற்கு நாடு தழு­விய அள­வில் நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும் எனத் தமி­ழக ஆளு­நர் ஆர்.என்.ரவி தெரி­வித்­துள்­ளார்.

இவ்­வி­வ­கா­ரத்­தில் மாநில அரசு நிறை­வேற்­றக்­கூ­டிய புதுச் சட்­டத்­தால் மட்­டும் தீர்வு கிடைத்து­வி­டாது எனத் தமி­ழக அர­சுக்கு எழு­தி­யுள்ள கடி­தத்­தில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இணைய சூதாட்ட தடைச் சட்­டம் தொடர்­பாக தமி­ழக அர­சுக்­கும் ஆளு­ந­ருக்­கும் இடை­யே­யான கருத்து மோதல் நீடித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், சூதாட்­டத்­திற்கு தடை விதிக்க வேண்­டும் என நாடா­ளு­மன்­றத்­தில் கவன ஈர்ப்பு தீர்­மா­னம் கொண்டு வந்து விவா­தம் நடத்­தக் கோரி திமுக சார்­பில் மக்­க­ளவை செய­லா­ள­ருக்கு கடி­தம் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

இணைய சூதாட்­டத்­துக்கு தடை விதிக்­கும் சட்­டத்தை மாநில அர­சுக்கு திருப்பி அனுப்­பிய ஆளு­நர், கடி­தம் ஒன்­றை­யும் இணைத்து அனுப்­பி­ய­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

அதில், தமி­ழக அர­சுக்கு சில ஆலோ­ச­னை­களை அவர் வழங்கி இருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

"இணைய விளை­யாட்டு உள்­ளிட்ட இணை­யத்­த­ளங்­க­ளு­டன் தொடர்­புள்ள சில அம்­சங்­களை ஒரு மாநில அர­சால் மட்­டும் தடை­செய்ய முடி­யாது. இது மத்­திய அர­சின் அதி­கார வரம்­புக்­குள் வரக்­கூ­டி­யது. இதற்கு தேசிய அள­வில் நட­வ­டிக்கை தேவை," என்று ஆளு­நர் ரவி தெரி­வித்­துள்­ளார்.

மாநில அர­சால் இணைய விளை­யாட்­டு­களை ஒழுங்­கு­படுத்த மட்­டுமே முடி­யும் என்­றும் அதை முற்­றி­லும் தடை­செய்ய முடி­யாது என்­றும் குறிப்­பிட்­டுள்ள ஆளு­நர், இதை மீறி தடைச் சட்­டத்தை நிறை­வேற்­றி­னால் அது நீதி­மன்­றத் தீர்ப்­புக்கு முர­ணாக அமை­யும் எனச் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

இதற்­கி­டையே, மக்­க­ள­வைச் செய­லா­ள­ருக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்­தில், இணைய சூதாட்­டத்­தால் தமி­ழ­கத்­தில் நாற்­ப­துக்­கும் மேற்­பட்­டோர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக திமுக நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வர் டி.ஆர்.பாலு குறிப்­பிட்­டுள்­ளார்.

மேலும், இணைய சூதாட்­டத்­தால் ஏரா­ள­மா­னோர் பணத்தை இழந்­துள்­ள­னர் என்­றும் அதை தடை செய்ய வேண்­டும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

ஆர்.என்.ரவி: இணைய சூதாட்டத்தைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கை தேவை