ராஜ்நாத் சிங்: ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்கவேண்டும்

ராஜ்நாத் சிங்: ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்கவேண்டும்

2 mins read
48536a99-29e3-4b9d-89d8-ab51b49c1e97
நாடா­ளு­மன்ற வரவு செல­வுத் திட்­டக் கூட்­டத்தொட­ரின் இரண்­டா­வது அமர்வு நேற்று காலை 11 மணிக்­குத் தொடங்­கியவுடன் மக்­க­ள­வை­யில் ராஜ்­நாத் சிங் உரை­யாற்­றி­னார். படம்: த இந்து பிசினஸ் லைன் -

புது­டெல்லி: நாடாளுமன்­றத்­தில் ராகுல் காந்தி பகி­ரங்க மன்­னிப்புக் கேட்கவேண்­டும் என பாது­காப்­புத் துறை அமைச்­சர் ராஜ்­நாத் சிங் வலி­யு­றுத்­தி­ய­தால், மக்­க­ள­வை­யில் காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் கடும் அம­ளி­யில் ஈடு­பட்­ட­னர்.

இத­னால், தொடங்­கிய முதல் நாளி­லேயே அமர்வு முடங்­கி­யது.

நாடா­ளு­மன்ற வரவு செல­வுத் திட்­டக் கூட்­டத்தொட­ரின் இரண்­டா­வது அமர்வு நேற்று காலை 11 மணிக்­குத் தொடங்­கியவுடன் மக்­க­ள­வை­யில் ராஜ்­நாத் சிங் உரை­யாற்­றி­னார்.

அப்­போது, "அண்­மை­யில் 10 நாள் பய­ண­மாக லண்­ட­னுக்­குச் சென்­றி­ருந்த ராகுல் காந்தி, அங்­குள்ள கேம்ப்­ரிட்ஜ் பல்­க­லைக் கழ­கத்­தி­லும் இதர நிகழ்ச்சிகளி­லும் பங்­கேற்­ற­போது, இந்தியா வின் மக்­க­ளாட்சி, இந்­திய அரசு குறித்­து கடுமையாக விமர்­சித்­திருந்­த­தா­கச் சுட்­டிக்­காட்­டி­னார்.

குறிப்­பாக, இந்­தி­யாவை அவ­மதிக்­கும் நோக்­கில் ராகுல் காந்­தி­யின் உரை இருந்­த­தா­க­வும் இந்­தியா என்­பது ஒட்­டு­மொத்த மக்­க­ளுக்­கு­மா­னது என்­ப­தால், அவரது பேச்சை அவை­யில் உள்ள அனைவரும் கண்­டிக்க வேண்­டும் என­வும் தெரி­வித்­தார்.

அத்­து­டன், ராகுல் காந்தி நாடா­ளு­மன்­றத்­தில் பகி­ரங்க மன்­னிப்புக் கேட்­க­வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

இந்­நி­லை­யில், "அதானி வழக்­கில் எங்­க­ளுக்கு நீதி வேண்­டும்," என முழக்­கமிட்டு காங்­கி­ரஸ் எம்­பிக்­கள் கடும் அம­ளி­யில் ஈடு­பட்­ட­தால் பிற்­ப­கல் 2 மணி வரை மக்­க­ளவை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

இத­னி­டையே, இந்தக் கூட்டத் தொடரில் டெல்லி முன்­னாள் துணை முதல்­வர் மணீஷ் சிசோ­டியா கைது, பீகார் முன்­னாள் முதல்­வர்­கள் லாலு­பி­ர­சாத் யாதவ், ராப்ரி தேவி, தற்­போ­தைய துணை முதல்­வர் தேஜஸ்வி யாதவ் ஆகி­யோ­ரின் வீடு­களில் சோதனை, தெலுங்­கானா முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவின் மகள் கவி­தா­வி­டம் விசா­ரணை என அடுத்­த­டுத்து அரங்­கேறி வரும் சம்­ப­வங்­கள் எதி­ரொ­லிக்­கும் என எதிர்பார்க்கப்ப­டு­கிறது.

குறிப்பாக சிபிஐ, அம­லாக்­கப் பிரிவு ஆகி­ய­வற்றை வைத்து தங்­களை மத்­திய பாஜக அரசு ஒடுக்க முயல்­வ­தா­கக் கூறி எதிர்க்­கட்­சி­கள் அம­ளி­யில் ஈடு­ப­டத் தயா­ராகி வரு­கின்­றன.

ஏப்­ரல் 6ஆம் தேதி வரை நடக்கும் இக்கூட்­டத்­தொ­ட­ரில் 35 மசோ­தாக்­களை நிறை­வேற்ற மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.