கர்நாடகா: பெங்களூரு-மைசூரூ இடையிலான அதிவிரைவுச் சாலைப் பணிகள் முழுமையாக முடிவடையாமல் அதனைப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட பெங்களூரு-மைசூரூ தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு 2018ல் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு ஒப்புதல் தந்து நிதி ஒதுக்கியது.
அதிவிரைவுச் சாலைப் பணிகள் நடந்துவந்த நிலையில், நேற்று முன்தினம் கர்நாடகா வந்த பிரதமர் மோடி அதனை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதன்மூலம் மைசூருவில் இருந்து பெங்களூருவுக்கு 75 நிமிடங்களில் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 118 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்தச் சாலையில் இன்னும் 21 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், பணிகள் முடிவடையாத சாலை யைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து, மக்களின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிப்பதாகவும் காங்கிரஸ் சாடியுள்ளது.
முடிவடையாத சாலை பற்றிய காணொளியை நடிகர் பிரகாஷ் ராஜும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


