தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருமணத் தளம் நடத்திய ஆய்வில் வேலை பார்க்கும் பெண்களையே விரும்பும் ஆண்கள் கைநிறைய பணம், பதவிக்கு முக்கியத்துவம் தரும் பெண்கள்

2 mins read
7d594179-f469-4ec5-9f8d-58d1fd9d59e7
-

புது­டெல்லி: திரு­ம­ணம் செய்து கொள்ள விரும்­பும் பெண்­கள் தங்­க­ளது வாழ்க்­கைத் துணை­யாக வரப்­போ­கி­ற­வர் கைநி­றைய சம்­பா­திக்கவேண்­டும், கௌரவ மான பதவி அல்லது வேலையில் இருக்கவேண்­டும் என்­று விரும்பு வதாகத் தெரி­வித்­துள்­ள­னர்.

திரு­ம­ணம் செய்துகொள்ள விரும்­பும் ஆணுக்­கும் பெண் ணுக்­கும் இடையே ஒரு பால­மா­கச் செயல்­பட்டு வரு­கிறது Shaadi.com என்ற இந்­திய மேட்ரி­ மோ­னி­யல் இணை­யத் தளம்.

அண்­மை­யில் இத்தளத்தின் சார்பில் 2.5 கோடி பேரி­டம் ஆய்வு நடத்தப்பட்டு, விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

திரு­ம­ணத்­திற்­குத் தயா­ரா­கும் ஆணும் பெண்ணும் தங்­க­ளின் வாழ்க்­கைத் துணையை எந்த அள­வு­கோ­லின் அடிப்­ப­டை­யில் தேர்வு செய்­கின்­ற­னர் என்பது குறித்த விவ­ரம் சேக­ரித்துள்­ளது.

இதில் கலந்­து­கொண்ட பெண்­களில் பெரும்­பா­லா­னோர், தனக்­குத் துணை­யாக வரப்போகும் ஆண்­கள் ஆண்­டிற்கு ரூ.30 லட்­சம் சம்­பா­திக்கவேண்­டும் என்­றும் அர­சாங்க வேலையில் இருப்­ப­வர்­ க­ளையே மணம் புரிய விரும்பு வதா­கவும் கூறி­யுள்­ள­னர்.

அதே­போல், பெரும்­பா­லான ஆண்­கள், வேலைக்­குச் செல்­லும் பெண்­க­ளையே விரும்­பு­வ­தா­க­வும் சட்­டம், விமா­னம், கட்­ட­டக்­கலை உள்­ளிட்ட துறை சார்ந்த வேலை­யில் இருந்­தால் மிக­வும் நல்­லது என கருதுவதாகவும் தெரி­வித்­துள்­ள­னர்.

இதர பணி­கள் என்­றால் தொழில்­நுட்­பம் சார்ந்த பணி­களை விரும்­பு­வ­தாக ஆய் வாளர்கள் குறிப்­பிட்­டுள்ளனர்.

அதி­கம் விரும்­பப்­ப­டாத வேலை­யாக விவ­சா­யம் இருப்­ப­தா­க­வும் ஆய்வு கூறு­கிறது.

ஆய்­வுத் தக­வ­லின்­படி, ஆண், பெண் இரு­பா­லா­ருமே திரு­ம­ணத்­திற்­குத் தயா­ரா­கும் வய­தாக 26 முதல் 29 வயது வரை குறிப்பிட்டு உள்ளதாகவும் தனக்­கான சரி­யான துணை­யைத் தேர்வு செய்­வ­தற்கு இன்னும் சில காலங்­கள் எடுத்­தா­லும் அதற்காகக் காத்­தி­ருக்­கின்­ற­னர் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆண்­டிற்கு ரூ.4 லட்­சம் சம்­பா­திக்­கும் பெண்­களைக் குறை வான ஆண்­களே விரும்புவதாகத் தெரி­வித்துள்ளனர்.

ஆய்­வின் ஒட்டுமொத்த தக­வ­லின்­படி, ஒரு பட்டத்தையாவது மணமக்கள் பெற்றிருப்பது முக்கியம், பொரு­ளியல் ரீதி­யாக யாரை­யும் சாராமல் தன் சுய சம்பாத்தியத்தில் வாழும் தன்மை, அரசாங்க வேலை­யில் இருப்­பது, லட்­சக்­க­ணக்­கில் பணம் சம்­பா­திப்பது ஆகியன ­ம­ண வாழ்க் கைக்கு உகந்த தன்­மை­க­ளா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.