புனே: இந்தியாவில் பரவலாக இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இத்தொற்றால் 10ல் ஆறு குழந்தைகள் பாதிக் கப்படுவதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக சளி, மூக்கு ஒழுகு தல், காய்ச்சல் போன்ற அறிகுறி களுடன் அதிகமானோர் வருவ தாகத் தெரிவிக்கின்றனர். இதுபோல், கடந்த இரண்டு மாதங்களில் அதிக அளவில் குழந்தைகள் அனுமதிக்கப்பட் டுள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சளி அறிகுறிகளுடன் வரும் குழந்தைகளின் எண்ணிக்கை 30-40% அதிகரித்திருப்பதாக டெல்லியைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் தினேஷ் ராஜ் கூறியுள்ளார்.
இந்தத் தொற்றுப் பாதிப்பால் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி (என்ஐவி) தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் புனேயில் சோதிக்கப்பட்ட 2,529 மாதிரிகளில் 428 பேருக்கு (17%) தொற்று இருந்தது தெரியவந்தது.
என்ஐவி விஞ்ஞானி டாக்டர் வர்ஷா போட்தார் கூறுகையில், புனே மாவட்டத்தில் கடுமையான சுவாச அறிகுறிகளுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் மாதிரிகள் இருந்ததாகக் குறிப்பிட்டார்.
பாரதி மருத்துவமனையின் குழந்தை மருத்துவ சிகிச்சைப் பிரிவுக்கான மருத்துவர் பக்தி சாரங்கி கூறுகையில், "கடந்த நான்கு முதல் ஆறு வாரங்களாக இங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு நிரம்பி வழிகிறது. அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள கைக்குழந்தைகள், பாலர் குழந்தைகளில் ஒருசிலர் கல்லீரல், ரத்த அழுத்த பாதிப்புகளுடன் இருந்தனர். உயிர் பாதுகாப்புக் கருவிகளும் அவர்களுக்குத் தேைவப்பட்டன," என்று கூறினார்.
இதனை தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் பாரத் புரந்தரே உறுதிப்படுத்தினார்.
"எச்3என்2 தொற்று மட்டுமல்ல, கொவிட்-19, எச்1என்1 நோயாளிகளும் அதிகரித்து வருகின்றனர். சுவாசக் கோளாறுபாதிப்பும் அதிகரித்து வருகிறது," என்று அவர் தெரிவித்தார்.

