மும்பை: பெண்கள் தற்போது அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வரும் நிலையில், 'வந்தே பாரத்' விரைவு ரயிலை இயக்கிய முதல் பெண் என்ற பெருமையை சுரேகா யாதவ் பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரில் இருந்து மும்பையின் சத்திரபதி சிவாஜி மகாராஜா முனையம் வரை 'வந்தே பாரத்' ரயிலை இயக்கி சாதனை படைத்துள்ள சுரேகாவின் புகைப் படத்தைப் பகிர்ந்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தன் டுவிட் டர் பக்கத்தில், 'வந்தே பாரத்' பெண் சக்தியால் இயக்கப்படுகிறது. 'வந்தே பாரத்' ரயிலின் முதல் பெண் ஓட்டுநர் சுரேகா யாதவ்," எனப் பதிவிட்டுள்ளார்.
விரைவில் 400 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக வும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், சதாரா பகுதியைச் சேர்ந்தவர் சுரேகா யாதவ், 55. இவர், கடந்த 1988ல் நாட்டின் முதல் பெண் ரயில் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்து இப்போது `வந்தே பாரத்' ரயிலை யும் இயக்கியுள்ளார்.

