புதுடெல்லி: இந்திய ஜனநாயகம் சீர்குலைந்து வருவதாக ராகுல் காந்தி லண்டனில் பேசி இருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ராகுல் காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கார்கே, மோடி வெளிநாடுகளுக்குச் சென்று நாட்டு மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் அதற்கு அவர் மன்னிப்புக் கேட்டது இல்லை. ஜனநாயகம் குறித்து பேசியது தொடர்பாக ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்கும் கேள்விக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.

