பிளாஸ்டிக் பையில் தாயின் உடல் மீட்பு; 24 வயது மகள் கைது

பிளாஸ்டிக் பையில் தாயின் உடல் மீட்பு; 24 வயது மகள் கைது

1 mins read
4e769372-ecf8-4368-acb7-af175d35d57c
-
multi-img1 of 2

மும்பை: மும்­பை­யில் பிளாஸ்­டிக் பையில் சிதைந்த நிலை­யில் இருந்த ஒரு தாயின் உடல் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இவர் கடந்த டிசம்­பர் மாதத்­தில் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­க­லாம் என சந்­தே­கிப்­ப­தாக காவ­லர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

மும்­பை­யில் உள்ள லால்­பாக் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் வீனா, 52. இவ­ரது மகள் ரிபுல் ஜெயின், 24.

சம்­ப­வத்­தன்று வீனா­வின் வீட்­டுக்கு உற­வி­னர் ஒரு­வர் வந்­துள்­ளார். வீடு உள்­பக்­க­மாக பூட்­டப்­பட்டு இருந்­த­தால் வெகு நேரம் தட்­டி­யும் கதவு திறக்­கப்படா­த­தால் சந்­தே­க­ம­டைந்த அவர் அங்­குள்ள காலா­ச­வுக்கி காவலர்­க­ளுக்­குத் தக­வல் கூறி­னார்.

இதை­ய­டுத்து, அங்கு வந்த காவ­லர்­கள் வீட்­டுக்­குள் மௌன மாக இருந்த ரிபுல் ஜெயி­னி­டம் தாய் கொலை தொடர்­பில் விசா ரித்து அவ­ரைக் கைது செய்­த­னர்.

"கொலை செய்­யப்­பட்ட பின்­னர் பெண்­ணின் கைகள், கால்­கள் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளன.

"வீட்­டில் இருந்து மீட்­கப்­பட்ட மின்­சார மார்­பிள் கட்­டர், அரி­வாள், சிறிய கத்­தி­யைப் பயன்­படுத்தி தாய் வீனா கொலை செய்­யப்­பட்­டுள்­ளார்," என்று காவல் அதி­காரி ஒரு­வர் கூறி­யுள்­ளார்.

வீட்­டில் உள்ள அல­மாரி, பாத்­தி­ரங்­கள், தண்­ணீர் தொட்டியில் இருந்து தாயார் வீனா­வின் உடல் பாகங்­களை காவல்துறை­யி­னர் மீட்­டுள்­ள­னர்.

இந்த உடல் பாகங்­க­ளின் மாதி­ரி­களை ஆய்­வ­கப் பரி­சோத னைக்­காக அனுப்பிவைத்­த­னர்.

முதற்­கட்ட விசா­ர­ணை­யில், தான் நன்கு படித்­துள்ளதாகவும் தனது தாயார் தவறி விழுந்து இறந்­து­விட்­டதாகவும் ரிபுல் கூறிய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. விசா­ரணை தொடர்­கிறது.