இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டலா மலைப் பகுதியில் இந்திய ராணுவத்தின் 'சீட்டா' ரக ஹெலிகாப்டர் நேற்று காலை (வியாழன்) விழுந்து நொறுங்கியதாக பிடிஐ ஊடகத் தகவல் குறிப்பிட்டிருந்தது.
ஹெலிகாப்டரை இயக்கிய விமானி, துணை விமானி இரு வரையும் தேடும் பணியும் தீவிரமாக தொடர்ந்தது.
"மண்டலாவுக்கு மேற்குப் பகுதியில் உள்ள போம்டிலா அருகே பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஹெலிகாப்டர், நேற்று காலை 9.15 மணியளவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துடனான (ஏடிசி) தொடர்பை இழந்தது.
"சம்பவ இடத்திற்குத் தேடுதல் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்," என்று கௌகாத்தி, பாது காப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் கூறினார்.
முதற்கட்டத் தகவலின்படி, கடும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாகத் தெரியவந்துள்ளது.
கடந்தாண்டு அக்டோபரில் அருணாச்சலப் பிரதேசத்தின் மிக்கிங்கில் இந்திய ராணுவத்தின் ஏஎல்ஹெச் ஹெலிகாப்டர் விபத் துக்குள்ளானது. இதில் இரு விமானிகள் உட்பட ஐந்து பணி யாளர்கள் உயிரிழந்தனர்.

