தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரதமர் மோடி-கௌதம் அதானி தொடர்பு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்து

2 mins read
1a37aa77-6567-4f59-ab13-89f76daf8f5b
-

புது­டெல்லி: பிர­த­மர் நரேந்­திர மோடிக்­கும் பொதுத்­துறை நிறு­வ­னங்­க­ளி­டம் பல லட்­சம் கோடி ரூபாய் கடன் பெற்ற கௌதம் அதா­னிக்­கும் உள்ள தொடர்பு குறித்து விசா­ரணை நடத்த எதிர்க்­கட்­சி­கள் வலி­யு­றுத்தி உள்­ளன.

அதானி குழு­மம் பங்­குச் சந்தை மோச­டி­யில் ஈடு­பட்­ட­தாக அமெ­ரிக்­கா­வின் ஹிண்­டன்­பர்க் நிறு­வ­னம் ஆய்­வ­றிக்கை வெளி­யிட்­டது.

இது­கு­றித்து நாடா­ளு­மன்ற கூட்­டுக்­குழு விசா­ரணை நடத்­த­வேண்­டும் என எதிர்க்­கட்­சி­கள் தொடர்ந்து வலி­யு­றுத்­தி­ய­தால், வரவுசெல­வுத் திட்ட கூட்­டத் தொட­ரின் இரண்­டா­வது அமர்வு கடந்த 13ஆம் தேதி தொடங்­கிய நிலை­யில், கடந்த நான்கு நாள்­க­ளாக நாடா­ளு­மன்­றம் செயல்­படாமல் முடங்­கி­யது.

இந்­நி­லை­யில், அதானி குழும முறை­கே­டு­கள் குறித்து விசா­ரணை நடத்­தக் கோரி காங்­கி­ரஸ், ஆம் ஆத்மி, கம்­யூ­னிஸ்டு உள்­ளிட்ட 16 கட்­சி­க­ளின் எம்­பிக்­கள் அம­லாக்­கத் துறை அலு­வ­கத்­துக்­குப் பேர­ணி­யா­கச் செல்ல முயன்­ற­தை டெல்லி காவல்­து­றை­யினர் தடுத்து நிறுத்­தினர்.

அப்­போது பேசிய காங்­கி­ரஸ் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே, பிர­த­மர் மோடி தான் செல்­லும் நாடு­க­ளுக்கு எல்­லாம் கௌதம் அதா­னி­யை­யும் கூட்­டிச் செல்­வ­தா­கக் கூறிய அவர், 1,650 கோடி­யு­டன் தனது தொழிலைத் தொடங்­கிய அதா­னி­யின் சொத்து மதிப்பு இப்­போது 13 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­தது எப்­படி என்று கேட்டார்.

அவர்­கள் இரு­வ­ருக்­கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விசா­ரணை நடத்­த­வும் அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

இத­னி­டையே, அதானி குழும முறை­கே­டு­கள் குறித்து விசா­ரணை நடத்­து­மாறு அம­லாக்­கத் துறை அலு­வ­ல­கத்­தில் நேற்று எதிர்க்­கட்­சித் தலை­வர்­கள் மனு அளித்­த­னர்.

இந்நிலையில், ஆளும் கட்­சி­களும் பிற எதிர்க்­கட்­சி­களும் நாடா­ளு­மன்­றத்­தின் பொன்­னான நேரத்தை வீண­டிப்­ப­தாக திரி­ணா­முல் மூத்த தலை­வர் சுதிர் பந்­தோ­பாத்யா குற்­றம்­சாட்­டி­னார்.