தானே: மகாராஷ்டிராவில் வெங்காயத்தின் விலை 2 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், வேதனையில் உள்ள ஆயிரக் கணக்கான விவசாயிகள் தங்க ளது வாழ்வாதாரத்தைக் காக்க இரண்டாம் நாளாக நேற்று பேரணியைத் தொடர்ந்தனர்.
வெங்காய விவசாயிகளுக்குக் கூடுதல் மானியம், 12 மணி நேர தடையில்லா மின்சாரம், விவ சாயக் கடன்கள் தள்ளுபடி உள் ளிட்ட 17 கோரிக்கைகளை நிறை வேற்றித் தரும்படி அவர்கள் அர சுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
வடக்கு மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் இருந்து பேரணியாகச் செல்லும் விவசாயி களும் பழங்குடியினரும் வரும் 20ஆம் தேதி மும்பை நகரை அடைவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
செல்லும் வழிகளில் சமைத்துச் சாப்பிட்டு, இரவில் சாலைகளில் தங்கி, பகலில் மும்பையை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
ஆசியாவின் மிகப்பெரிய மொத்த விற்பனைச் சந்தையான நாசிக்கில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.2க்கு விற்கப்படுவதால், வெங்காயத்தை நெருப்பில் கொட்டி விவசாயிகள் தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.
குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,000 என விலையை நிர்ணயிக்கும்படி வலியுறுத்தி உள்ள அவர்கள், குவிண்டாலுக்கு ரூ.300 மானியம் தருவதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியதற்கு வேண்டாம் என மறுத்துவிட்டனர்.
விவசாயிகளின் 200 கிலோ மீட்டர் தூரப் பேரணி, நேற்று தானே மாவட்டத்தை அடைந்த நிலையில், பெண்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டது.
மகாராஷ்டிர அரசுக்கு விவசாயிகளின் போராட்டம் பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ள நிலையில், வெங்காயத்தைக் கொள்முதல் செய்ய ஒரு சில நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எனினும், "இது காலம் கடந்த நடவடிக்கை," என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.
இதனிடையே, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அவர்களுடன் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் முன்வந்துள்ளதாக தகவல்கள் கூறின.

