பிரதமர் அலுவலக அதிகாரிபோல வலம் வந்தவர் கைது

பிரதமர் அலுவலக அதிகாரிபோல வலம் வந்தவர் கைது

2 mins read
3e4908b0-3235-41f7-8aa9-b0adc3c4606d
-

புது­டெல்லி: பிர­த­மர் அலு­வ­லக உயர் அதி­காரி என்று கூறி ஸ்ரீந­க­ரில் 'இசட்-பிளஸ்' சிறப்­புப் பாது­காப்­பு­டன் வலம் வந்த குஜ ராத்தைச் சேர்ந்­த­ ஒருவரைக் காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர். கிரண் பாய் படேல், பிர­த­ம­ரின் அலு­வ­ல­கத்­தில் கூடு­தல் இயக்­கு­ந­ராக பணி­யாற்றி வரு­வ­தா­கக் கூறி காஷ்­மீ­ருக்கு இவ் வாண்டு இரண்டு முறை சுற்றுலா சென்றுள்ளார்.

அங்­குள்ள ஐந்து நட்­சத்­திர விடு­தி­யில் தங்க வைத்து குண்டு துளைக்­காத காரு­டன் 'இசட்-பிளஸ்' பாது­காப்­பும் காஷ்­மீர் மாநில நிர்­வாகம் அவ­ருக்கு வழங்­கி­யது.

கடந்த மாதம் முதல் முறை­யாகச் சென்ற அவர் அந்த மாநில அதி­கா­ரி­க­ளு­டன் ஆலோ­சனை நடத்­தி­னார்.

துணை ராணு­வப் படை­யி­னர் புடை­சூழ பல இடங்­களை அவர் சுற்றிப் பார்த்­துள்­ளார்.

இது தொடர்­பான தக­வல்­களை அவர் டுவிட்­ட­ரில் பதி­விட்­டார்.

குஜ­ராத் மாநில பாஜக பொதுச் செய­லா­ளர் பிர­தீப் சிங் பகேலா உள்­பட ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் டுவிட்­ட­ரில் இவரை பின் தொடர்­ப­வர்­க­ளாக உள்­ள­னர்.

இந்த நிலை­யில் இம்­மா­தம் 2ஆம் தேதி மீண்­டும் அவர் ஸ்ரீந­க­ருக்கு வந்­தார்.

ஆனால் அவர் மீது மாவட்ட ஆட்­சி­யருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

அவர் அளித்த புகாரின் அடிப்ப­டை­யில் பலே ஆசாமியை காவல்துறையினர் கைது செய்தனர். விசா­ர­ணை­யில் அவர் மோச­டி­ நபர் என்­பது தெரிய­ வந்­தது. அவர் கைது செய்­யப்­பட்ட விவ­கா­ரத்தை மத்­திய, மாநில அர­சு­கள் ரக­சி­ய­மாக வைத்­தி­ருந்த நிலை­யில், நீதி­மன்­றத்­தில் அவர் முன்­னி­லை­யா­ன­தால் விவ­கா­ரம் வெளிச்­சத்­துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக் கிறது.