திருப்பதி: தெலுங்கானா மாநிலத்தில் செகந்திராபாத் ஆர்பி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தீ மூண்டதில் ஆறு ஊழியர்கள் உயிரிழந்தனர்.
எட்டு மாடி வணிக வளாகத்தில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
5வது தளத்தில் 'கால் சென்டர்' இயங்கி வருகிறது. வியாழன் இரவு 8வது தளத்தில் தீ மூண்டது. அதிவேகத்தில் தீ 7, 6, 5வது தளங்களுக்கும் பரவியது. இதனால் வணிக வளாகத்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினர். சிலர் சன்னல் வழியாக குதித்து உயிர் தப்பினர்.
ஒரு புறம் மழை பெய்து கொண்டு இருந்தாலும் தீ மளமளவென எரிந்தது. 5வது தளம் புகை மண்டலமாக மாறியது.
இதையடுத்து கால் சென்டரில் வேலை செய்துகொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அலுவலகத்தில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கட்டடங்களில் இருந்த கண்ணாடிகள் தீயில் வெடித்துச் சிதறியதால் ராட்சத கிரேன் மூலம் கால் சென்டரில் சிக்கிஇருந்த 18 பேர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்களில் ஆறு பேர் சிகிச்சை பலன் அளிக் காமல் இறந்தனர். இறந்தவர்கள் அனைவரும் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளையர்கள் என நம்பப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த மற்றொரு விபத்தில் எட்டுப் பேர் உயிரிழந்தனர். சம்பலின் சந் தெள பகுதியில் உருளைக் கிழங்கு குளிர்சாதனக் கிடங்கின் மேற்கூரை இடிந்தது. இதில் 11 பேர் காயமடைந்தனர். காவல் துறையினர், மோப்ப நாய் உதவி யுடன் காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றனர்.

