அமைச்சர் பியூஸ் கோயல்: 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்
புதுடெல்லி: உலகின் மாபெரும் துணி உற்பத்தி மையமாக இந்தி யாவை உருவாக்க 70,000 கோடி ரூபாய் முதலீட்டில் ‘பி.எம்.மித்ரா’ ஆடைகள் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதன்வழி, 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உரு வாகும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகம், தெலுங்கானா, கா்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களிலும் ‘ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம், ஆடைகள் பூங்கா’ (பி.எம். மித்ரா) திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளியன்று டுவிட்டரில் அறிவித்திருந்தார்.
“இந்தப் பூங்காக்கள் மூலம் உற்பத்தி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, முதலீட்டு மையம், உலகளாவிய துணி வழங்குநராக இந்தியா உருவெடுக்கும்,” என்று குறிப்பிட்ட பியூஸ் கோயல், வேளாண்மைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் துறையாக துணித் துறை உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏழு ஒருங்கிணைந்த ஆடைப் பூங்காக்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்த அமைச்சர் பியூஸ் கோயல், காலத்திற்கேற்ப ஆடைத் துறையை இப்பூங்காக்கள் வலுப்படுத்தும் என்றார்.
இத்திட்டத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்கள் குறைந்தது 1,000 ஏக்கர் நிலம், தடையில்லா மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட வசதிகளைச் செய்து தர அனுமதி வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தைப் பிரத மரின் மித்ரா பூங்கா திட்டத்துக்காகத் தேர்ந்தெடுத்து உள்ள தற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தென் தமிழ்நாட்டின் துணித் துறை வளர்ச்சிக்கு இது பெரும் ஊக்கமாக அமையும்.
“தமிழக அரசின் சிப்காட்டிடம் 1,052 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு இந்தத் திட்டத்தைத் தொடங்கி தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கத் தயாராக உள்ளோம்,” எனக் கூறியுள்ளார்.
உலக அளவில் ஆடை ஏற்று மதியில் இப்போது இந்தியா ஆறாவது இடத்தில் இருந்து வருகிறது.