சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 88 ஆண்டுகள் சிறை

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 88 ஆண்டுகள் சிறை

1 mins read
763fed4c-c4b7-499e-b251-635549367ecd
-

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், தேலம்பாடியைச் சேர்ந்த எல்சூர் முகமது, 60, என்ற தொழிலாளி, ஒன்பது மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகளுக்கு மாம்பழம், நெல்லிக்காய்களை வாங்கிக் கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரியவந்தது.

இதுதொடர்பான வழக்கில், காசர்கோடு கூடுதல் செசன்சு நீதிபதி மனோஜ், முகமது வுக்கு 88 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.