உத்தவ் தாக்கரே, ரஜினி திடீர் சந்திப்பு

உத்தவ் தாக்கரே, ரஜினி திடீர் சந்திப்பு

1 mins read
6fde0516-5e78-45d6-907c-e4d8c7f77438
-

மும்பை: மகா­ராஷ்­டிர முன்­னாள் முதல்­வர் உத்­தவ் தாக்­க­ரேயை மும்­பை­யில் உள்ள அவ­ரது இல்­லத்­தில் நடி­கர் ரஜி­னி­காந்த் சந்தித்­துப் பேசி­யது அம்­மா­நில அர­சி­யல் களத்­தில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இந்­திய, ஆஸ்­தி­ரே­லிய அணி­க­ளுக்கு இடை­யே­யான ஒரு­நாள் கிரிக்­கெட் போட்டி மும்­பை­யில் நடை­பெற்­றது. இப்­போட்­டியை நேரில் கண்டு ரசித்­தார் ரஜி­னி­காந்த்.

அதன் பின்­னர் புத்­தக வெளியீட்டு நிகழ்­வில் பங்­கேற்ற அவர், திடீ­ரென உத்­தவ் தாக்­க­ரே­யின் இல்­லத்­துக்­குச் சென்­றார். அவ­ருக்கு பூங்­கொத்து கொடுத்து வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து உத்­தவ் தாக்கரே­யு­டன் அவர் தனி­யா­கப் பேசி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அது­குறித்த மேல­திக தக­வல்­கள் எதை­யும் இரு தரப்­புமே வெளியி­ட­வில்லை.

எனி­னும் ரஜி­னி­காந்த் மீண்­டும் தங்­கள் இல்­லத்­துக்கு வந்­தது மகிழ்ச்சி அளித்­துள்­ள­தாக ஆதித்ய தாக்­கரே தனது டுவிட்டர் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இது அர­சி­ய­லுக்கு அப்­பாற்­பட்ட மரி­யாதை நிமித்­த­மான சந்திப்பு என 'உத்­தவ் பாலா­சாகேப் தாக்­கரே சிவ­சேனா' கட்சி­யின் மூத்த தலை­வர் ஒரு­வர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

இதற்கு முன்பு கடந்த 2010ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதம் சிவசேனா தலை­வர் பால்­தாக்கரேயை அவ­ரது இல்­லத்­தில் சந்­தித்­தி­ருந்­தார் ரஜினி.