செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
13ea737a-5839-4b5d-a434-b36716d1bef7
-
Google News Preferred Icon

கொச்சி நகராட்சிக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த பசுமைத் தீர்ப்பாயம்

திருவனந்தபுரம்: திடக்கழிவு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து கேரள மாநிலத்தின் கொச்சி மாநக ராட்சிக்கு ரூ.100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் பிரம்மபுரம் பகுதியில் திடக்கழிவு மையம் உள்ளது. கடந்த 6ஆம் தேதி இங்கு தீ விபத்து நிகழ்ந்தது. அப்போது அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகள் எரிந்ததில், அப்பகுதியை புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். 12 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகே தீ அணைக்கப்பட்டது. இதை யடுத்தே ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமித்ஷா: தாய்மொழியை மறவாதீர்

அகமதாபாத்: வாழ்க்கையில் எதைச் செய்ய மறந்தாலும் தாய்மொழியை மட்டும் மறந்துவிடக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள சயோஜிராவ் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தாய்மொழி காரணமாக நாம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டோம் என்று நினைப்பவர்கள் அத்தகைய தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளிவர வேண்டும் என அறிவுறுத்தினார். மொழி என்பது ஓர் உணர்வு என்றும் தாய்மொழியை விட்டுவிடக்கூடாது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

ரயில்வே பணிக்கு நிலங்கள் லஞ்சம்: லாலு மீது வழக்கு; சிபிஐ முடிவு

பாட்னா: ரயில்வே துறையில் பணியில் சேர, நான்காயிரம் பேரிடம் லஞ்சமாக நிலங்களைப் பெற்றது தொடர்பில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குப் பதிவு செய்ய உள்ளது சிபிஐ. மத்திய ரயில்வே அமைச்சராக 2004 முதல் 2009ஆம் ஆண்டு வரை பதவி வகித்தபோது, லாலு பிரசாத்தின் குடும்பத்தார் இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதுபற்றி சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரித்து வருகின்றன. இந்நிலையில் 4,000 பேரிடம் இவ்வாறு லஞ்சம் பெற்றதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து விரிவான விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

சிறு தானிய மாநாடு: பாப்பம்மாள் பாட்டி காலைத் தொட்டு ஆசிபெற்ற பிரதமர்

புது­டெல்லி: உணவு பாது­காப்பு தொடர்­பான சவால்­களைச் சமா­ளிக்க சிறு­தா­னி­யங்­கள் உத­வும் எனப் பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார். டெல்­லி­யில் சிறு­தா­னிய மாநாட்டை தொடங்கி வைத்த அவர், இந்­தி­யா­வின் கோரிக்­கையை ஏற்று 2023ஆம் ஆண்டை அனைத்­து­லக சிறு தானி­யங்­கள் ஆண்­டாக ஐநா அமைப்பு அறி­வித்­தி­ருப்­பது இந்­தி­யா­வுக்­குக் கிடைத்த பெரும் கௌர­வம் என்­றார். "உலகளவில் சிறு தானி­யங்­க­ளின் பயன்­பாட்டை ஊக்­கு­விக்க இந்­தியா தொடர்ந்து பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டுள்ளது," என்­றார் பிர­த­மர் மோடி. இதற்­கி­டையே, இம்­மா­நாட்­டில் தமி­ழ­கத்­தின் கோவை மாவட்­டத்­தைச் சேர்ந்த 107 வய­தான இயற்கை விவ­சா­யி­யும் பத்­ம­ஸ்ரீ விருது பெற்­ற­வ­ரு­மான பாப்­பம்­மாள் பாட்­டி­யும் பங்கேற்றார். அப்­போது பிர­த­மர் மோடியை சந்­தித்­துப் பேசிய அவர், பிரதமருக்கு சால்வை அணி­வித்து வாழ்த்து தெரி­வித்­தார். இதை­ய­டுத்து மூதாட்டி பாப்­பம்­மா­ளின் காலைத் தொட்டு வணங்கி அவ­ரி­டம் ஆசி பெற்­றார் பிர­த­மர் மோடி.