ராகுல் வீட்டில் காவல்துறை; காங்கிரஸ் கடும் கண்டனம்

ராகுல் வீட்டில் காவல்துறை; காங்கிரஸ் கடும் கண்டனம்

1 mins read
b583cb30-eaef-4430-b493-f71b2e4d7ed1
நாட்­டில் உள்ள பெண்­கள் தொடர்ந்து பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளாகி வருவதாக கூறி­யதை அடுத்து, காங்­கி­ரஸ் கட்­சி­யின் மூத்த தலை­வர் ராகுல் காந்­தி­யி­டம் டெல்லி காவல்­துறை விசா­ரணை மேற்­கொண்­டது. படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: நாட்­டில் உள்ள பெண்­கள் தொடர்ந்து பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளாகி வருவதாக கூறி­யதை அடுத்து, காங்­கி­ரஸ் கட்­சி­யின் மூத்த தலை­வர் ராகுல் காந்­தி­யி­டம் டெல்லி காவல்­துறை விசா­ரணை மேற்­கொண்­டது.

அண்­மை­யில் காஷ்­மீர் சென்­றி­ருந்­த­போது அங்கு நடை­பெற்ற கூட்­டத்­தில் பேசி­ய­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருந்­தார்.

அவ­ரது இந்­தப் பேச்சு சமூக வெளி­யில் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யதை அடுத்து, டெல்லி காவல்­துறை வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், ராகுல் பேச்சு குறித்து விசா­ரிக்க டெல்லி காவல்­துறை அதி­கா­ரி­கள் நேற்று அவ­ரது வீட்­டுக்­குச் சென்­ற­னர்.

பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உள்­ளா­கி­ய­வர்­கள் குறித்து தன்னி­டம் இருக்­கும் விவ­ரங்­களை ராகுல் காந்தி காவல்­து­றைக்கு அளிக்க வேண்­டும் என்­றும் அப்­போ­து­தான் பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளுக்கு உரிய பாது­காப்பு அளிக்க இய­லும் என்­றும் காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

ராகுல் வீட்­டின் முன்பு காவலர்­கள் குவிக்­கப்­பட்­ட­தால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. காங்­கி­ரஸ் கட்­சி­யி­ன­ரும் அங்கு குவிந்­த­னர்.

காவல்­து­றை­யின் இந்த நட­வடிக்­கைக்கு காங்­கி­ரஸ் கட்சி கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.

மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷாவின் அனு­மதி இன்றி காவல்­துறை இவ்­வாறு செயல்­பட்­டி­ருக்க இய­லாது என்று காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் ஜெய்­ராம் ரமேஷ் கூறி­னார்.

"ராகுல் மேற்­கொண்ட இந்­திய ஒற்­றுமை யாத்­திரை முடிந்து 45 நாள்­கள் ஆகின்­றன. உண்­மை­யி­லேயே டெல்லி காவல்­து­றைக்கு அக்­கறை இருந்­தி­ருந்­தால், ஒற்­று­மைப் பய­ணத்­தின் போது பேசி­யது தொடர்­பாக இத்­தனை நாள்­கள் அமைதி காத்தது ஏன்" என்­றும் அவர் கேள்வி எழுப்பினார்.