புதுடெல்லி: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத்தை டெல்லி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைதாகினர். கடந்த 15ஆம் தேதி கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் டெல்லி வந்திறங்கிய பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர்.
இந்நிலையில், 2076.38 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதை துபாயில் இருந்து கடத்தி வந்த இருவரைக் கைது செய்தனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

