தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உறவை மேலும் வலுப்படுத்த ஜப்பான் - இந்தியா இணக்கம்

2 mins read
6d80c205-5f43-464d-9513-97dde16fa6ce
-

ஜப்பான்: ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.320,000 கோடி முத­லீடு செய்­யப்படும்

புது­டெல்லி: இந்­தியா - ஜப்­பான் இடை­யே­யான உறவை உல­க­ளா­விய வகை­யில் மேம்­ப­டுத்த ஒப்­பந்­தம் செய்­யப்­படும் என்று பிர­த­மர் நரேந்­திர மோடி­யும் ஜப்­பான் பிர­த­மர் ஃபுமியோ கிஷி­டா­வும் கூட்­டாக அறி­வித்­த­னர். மேலும் இந்த ஒப்­பந்த நீட்­டிப்­பா­னது, அமை­தி­யான, நிலை­யான மற்­றும் வள­மான இந்தோ-பசி­பிக் வட்­டார வளர்ச்­சிக்கு உத­வும் என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

ஜப்­பானியப் பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா அரசு முறை பய­ண­மாக நேற்று முன்­தி­னம் இந்­தி­யா­வுக்கு வரு­கை­ய­ளித்தார்.

டெல்­லி­யில் உள்ள ஹைத­ரா­பாத் இல்­லத்­தில் பிர­த­மர் மோடி மற்­றும் ஜப்­பான் பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா இரு­வ­ரும், இரு நாடு­க­ளையும் சேர்ந்த உயர்­மட்ட குழு­வி­னர் அடங்­கிய கூட்­டத்­தில் ஆலோ­சனை நடத்­தி­னர்.

இந்தக் கூட்­டத்­தில் மத்­திய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­சர் ஜெய்­சங்­கர், இந்­திய பாது­காப்பு ஆலோ­ச­கர் அஜித் தோவல் உள்­ளிட்­டோர் பங்­கேற்­ற­னர்.

அப்­போது இரு நாடு­க­ளுக்கு இடையே பரஸ்­பர ஒத்­து­ழைப்பு, வர்த்­த­கம் உள்­ளிட்­ட­வற்றை மேம்­ப­டுத்­து­வது குறித்து இரு நாட்­டுப் பிர­த­மர்­களும் ஆலோ­சித்­த­னர். குறிப்­பாக இந்தோ - பசி­பிக் வட்­டா­ரத்­தின் பாது­காப்பு தொடர்­பா­க­வும் அவர்­கள் ஆலோ­சித்­த­னர்.

இது­தொ­டர்­பாக பிர­த­மர் நரேந்­திர மோடி­யின் அலு­வ­ல­கம் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. அதில், ஜி20 அமைப்­புக்கு இந்­தியா தலை­மைப் பொறுப்பை ஏற்­றுள்­ளது. அதே­நே­ரத்­தில், ஜி7 உச்சநிலை மாநாட்­டுக்கு ஜப்­பான் தலைமை தாங்­கு­கிறது.

உலக நல­னுக்­காக இரு­நா­டு­களும் பல்­வேறு துறை­களில் இணைந்து செயல்­பட இது சிறந்த வாய்ப்­பாக அமைந்­துள்­ளது.

இரு­த­ரப்பு உற­வு­களில் குறிப்­பாக பாது­காப்பு, மின்­ன­ணு­வி­யல் தொழில்­நுட்­பம், வர்த்­த­கம் மற்­றும் முத­லீடு மற்­றும் சுகா­தா­ரம் ஆகிய துறை­களில் முன்­னேற்­றம் குறித்து இரு நாடு­களும் ஆய்வு செய்­ய­வுள்­ளன. முக்­கி­ய­மாக தொழில்­நுட்­பங்­க­ளுக்­கான நம்­ப­க­மான விநி­யோ­கச் சங்­கி­லி­க­ளின் முக்­கி­யத்­து­வம் குறித்­தும் விவாதிக்கப்பட்டது," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்­தி­யா­வில் ஜப்பானின்

முத­லீடு அதிகரிக்கும்

ஜப்­பானிய பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில், இந்­தி­யா­வு­டன் ஜப்­பான் எப்­போ­தும் நட்­பு­ற­வைப் பாராட்டி வரு­கிறது. இந்­தி­யா­வுக்­கும் ஜப்­பா­னுக்­கும் இடை­யே­யான பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பு தொடர்ந்து வலு­வ­டை­யும்.

இந்­தி­யா­வின் வளர்ச்­சிக்கு ஜப்­பான் தொடர்ந்து ஒத்­து­ழைப்பு அளிக்­கும்.

உக்­ரே­னில் ரஷ்யா தொடுத்­துள்ள போரை அடுத்து உலக அள­வில் உணவு மற்­றும் எரி­சக்­திப் பொருள்­க­ளின் விலை­யேற்­றம் போன்ற அனைத்­து­ல­கச் சவால்­களை எதிர்­கொள்ள இந்த இரு­நா­டு­களும் ஒருங்­கி­ணைந்து செயல்­படும் என்­றும் ஜப்­பா­னிய பிர­த­மர் கிஷிடா தெரி­வித்­தார். அதே­நே­ரத்­தில் ஜப்­பா­னின் பொரு­ளா­தார வாய்ப்­பு­க­ளுக்கு முக்­கி­யத்­து­வத்தை ஏற்­ப­டுத்­தும்.

இந்தியாவில் ஜப்பான் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.320,000 கோடியை முத­லீடு செய்­ய­வுள்­ளது என்று அந்த அறிக்­கை­யில் ஜப்­பா­னி­யப் பிர­த­மர் கிஷிடா தெரி­வித்­துள்­ளார்.