உ.பி. குண்டர்களின் சொத்துகள் முடக்கம்

உ.பி. குண்டர்களின் சொத்துகள் முடக்கம்

2 mins read
41886a1a-fa86-40b8-9bd4-0c96bac165a5
-

லக்னோ: உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தில் கடந்த 2 ஆண்­டு­க­ளாக குண்­டர் கும்­ப­லைச் சேர்ந்­த­வர்­களை ஒடுக்க மாவட்ட நிர்­வா­கத்­தி­ன­ரு­டன் இணைந்து தீவிர நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

பிர­பல குண்டர்களான விஜய் மிஸ்ரா, முக்தார் அன்சாரி, சுசில் மூச், பதான் சிங் படூ, சுந்­தர் பதி, சுனில் ரதி, துருவ் சிங், அனு­பம் துபே, உட்­பட குண்­டர் கும்­ப­லைச் சேர்ந்த 64 பேர் சட்­ட­விரோ­த­மாக ஈட்­டிய ரூ.2,000 கோடி மதிப்­பி­லான சொத்­து­கள் முடக்­கப்­பட்­டன.

இந்­தத் தக­வலை அம்­மா­நி­லத்­தின் சட்­டம் ஒழுங்கு காவல்­துறை உயர் அதி­கா­ரி­யான பிர­சாத் குமார் செய்­தி­யா­ளர்­க­ளுக்கு அளித்த பேட்­டி­யில் தெரி­வித்­தார்.

குற்­றச் செயல்­க­ளிலோ அல்­லது சட்­டத்­துக்கு விரோ­த­மா­கவோ செயல்­பட்­டால் அதை உ.பி காவல்­துறை ஒரு­போ­தும் பொறுத்­துக் கொள்­ளாது என்று அந்த அதி­காரி எச்சரித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் முக்­தர் அன்­சா­ரி­யின் ரூ.523 கோடி மதிப்­பி­லான சொத்­து­களும், அத்­திக் அக­ம­து­வின் ரூ.413 கோடி சொத்­து­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

அடி­தடி, அச்­சு­றுத்­தல், நிலத்­தைப் பிடுங்­கு­தல், சட்டவிரோத மாக வணிகம் செய்தல் போன்ற அடா­வ­டிச் செயல்­களில் ஈடு­பட்டு வந்த குண்­டர் கும்­ப­லைச் சேர்ந்த 64 பேர் மற்­றும் அவர்­க­ளின் கும்­ப­லைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­களை மாதத்­துக்கு இரு முறை டிஜிபி அலு­வ­ல­கம் கண்­கா­ணித்து வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

நிலக்­கரி தொழிலை சட்­ட­விரோ­த­மாக நடத்­தும் கும்­பல்­க­ளின் உரி­மங்­கள் ரத்து செய்­யப்­பட்டு அவர்­க­ளின் சொத்­து­களும் முடக்­கப்­பட்­டன.

இது தவிர 18 குண்டர்கள் மீது தேசிய பாது­காப்பு சட்­டத்­தின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ளது. பலர் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்றார் பிரசாத்.