10 கோடி ரூபாய் கேட்டு நிதின் கட்காரிக்கு மிரட்டல்

1 mins read
7089b792-be3a-4311-8220-31b778d903b6
-

புது­டெல்லி: பார­திய ஜனதா கட்­சி­யின் முக்­கிய தலை­வர்­களில் ஒரு­வ­ரும் மத்­திய சாலை போக்­கு­வ­ரத்து மற்­றும் நெடுஞ்­சா­லைத் துறை அமைச்­ச­ரு­மான நிதின் கட்­கா­ரி­யின் மும்பை அலு­வ­ல­கத்­திற்கு ரூபாய் 10 கோடி கேட்டு தொலை­பேசி மூலம் மிரட்­டல் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மிரட்­டல் விடுத்­த­வ­ரை அடையாளம் கண்டு கைது­செய்­யும் நட­வ­டிக்­கையை மகா­ராஷ்­டிரா காவல்­துறை முடுக்கி விட்­டுள்­ளது.

இந்த மிரட்டலை அடுத்து நாக்­பூ­ரில் உள்ள அமைச்­ச­ரின் அலு­வ­ல­கத்­திற்­கும் வீட்­டிற்­கும் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

நாக்­பூ­ரில் உள்ள அவ­ரது அலு­வ­ல­கத்­துக்கு புதன்­கி­ழமை காலை­யி­லும் மாலை­யி­லும் ஜெயேஷ் புஜாரி என்ற ஜெயேஷ் காந்தா என்பவர், தொலை­பேசி மூலம் தொடர்­பு­கொண்டு ரூ.10 கோடி வேண்­டும். கொடுக்­கா­விட்­டால் நிதின் கட்­கா­ரியை தாக்­கு­வேன் என்று மிரட்­டி­னார்.

இது­கு­றித்து அலு­வ­லக ஊழி­யர்­கள் காவல்­து­றை­யில் புகார் அளித்­த­னர். நிதின் கட்­காரி அலு­வ­ல­கத்­துக்கு மிரட்­டல் அழைப்பு வரு­வது இது இரண்­டா­வது முறை­யா­கும். கடந்த ஜன­வரி மாதம் 14ஆம் தேதி புஜாரி எனக் கூறி ஒரு­வர் நிதின் கட்­காரி அலு­வ­ல­கத்­துக்கு போன் செய்து ரூ.100 கோடி கேட்டு மிரட்­டி­னார்.

அவர் தாவூத் இப்­ரா­கிம் கூட்­டாளி என­வும் கூறி­யி­ருந்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.