புதுடெல்லி: நாட்டின் இறையாண்மைக்கு எதிரான தகவல்களை வெளியிட்ட 110 யூடியூப் செய்தி சேனல்கள், 248 இணையதளங்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பரில் தடை விதிக்கப் பட்டது.
மக்களவையில் ஒரு எழுத்துபூர்வ பதிலில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் நேற்று இத்தகவலை தெரிவித்தார்.
மற்றொரு கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர், 1,160 செய்திகள் பொய்யானவை என்று செய்திகளின் உண்மைத் தன்மையைக் கண்டறியும் பிரிவு கண்டுபிடித்துள்ளது என்று கூறினார்.

