தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்கொடுமையை தடுக்க நடவடிக்கை

தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்கொடுமையை தடுக்க நடவடிக்கை

1 mins read
2dca870b-85b0-4be1-a338-d05a4d907d69
-
Google News Preferred Icon

புது­டெல்லி: தேசிய குற்ற ஆவ­ண­காப்­பக (என்­சி­ஆர்பி) புள்­ளி­வி­வ­ரத்­தின்­படி நாடு முழு­தும் தாழ்த்­தப்­பட்­ட­வர்­கள் மீதான வன்­கொ­டுமை தொடர்­பாக 1,89,945 வழக்­கு­கள் பதி­வா­கி­யுள்­ள­தாக மத்­திய உள்­துறை இணைய அமைச்­சர் அஜய் குமர் மிஸ்ரா தெரி­வித்­துள்­ளார். நாடா­ளு­மன்­றத்­தில் பகு­ஜன் சமாஜ் கட்­சி­யின் கிரிஷ் சந்­திரா எழுப்­பிய கேள்­விக்­குப் பதில் அளிக்­கை­யில் அமைச்­சர் அஜய் குமார் மிஸ்ரா இவ்­வாறு தெரி­வித்­தார்.

காவல்­துறை மாநில அர­சின் கட்­டுப்­பாட்­டில் இருந்­தா­லும், தாழ்த்­தப்­பட்­ட­வர்­கள் மீதான வன்­கொடு­மை­க­ளைத் தடுப்­பது குறித்து மத்­திய அரசு ஆலோ­சனை வழங்கி வரு­வதாக அமைச்­சர் அஜய் குமார் தெரி­வித்­தார்.