கேரளாவில் தொற்று அதிகரிப்பு; கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை

கேரளாவில் தொற்று அதிகரிப்பு; கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை

2 mins read
18159fa3-d2ca-4f55-bff4-e53806074d92
-

திருச்­சூர் மாவட்­டத்­தில் மட்­டும் கொரோனாவுக்கு மூன்று பேர் பலி­

திரு­வ­னந்­தபுரம்: கேரள மாநி­லத்­தில் கொரோனா தொற்­றுப்­பரவல் மீண்­டும் அதி­க­ரித்து வருவதை­ய­டுத்து, பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்­னெச்­ச­ரிக்கை நட­வடிக்கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என அனைத்து மாவட்­டங்­களும் உஷார்­ப­டுத்­தப் பட்­டுள்­ளன.

நாட்­டின் பல்­வேறு பகு­தி­களில் அண்­மைய சில நாள்­க­ளாக கொரோனா தொற்­றுப்­பா­திப்பு அதி­க­ரித்து வரு­கிறது. நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் ஆயிரத்­துக்­கும் மேற்­பட்­டோ­ருக்கு தொற்­றுப் பாதிப்பு இருப்பது உறு­தி­யா­னது.

இதை­ய­டுத்து பல்­வேறு துறை­க­ளைச் சார்ந்த உயர் அதி­காரி­களு­டன் பிர­த­மர் மோடி அவசர ஆலோ­சனை மேற்­கொண்டார். அப்­போது கொரோனா பாதிப்பை உறுதி செய்­வ­தற்­கான அனைத்து பரி­சோ­த­னை­க­ளை­யும் மேற்­கொள்ள வேண்­டு­மென அவர் அறி­வு­றுத்­தி­னார்.

மூச்­சுத்­தி­ண­றல் உள்­ளிட்ட பாதிப்­புள்­ள­வர்­க­ளுக்கு உரிய சிகிச்­சை­கள் அளிக்­கப்­ப­டு­வதை உறுதி செய்ய வேண்­டும் கண்­கா­ணிப்பை தீவி­ரப்­ப­டுத்த வேண்­டும் என்­றும் பிர­த­மர் கூறி­னார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று மட்­டும் கேர­ளா­வில் 176 பேருக்­கும் புதன்­கி­ழமை 201 பேருக்­கும் தொற்­றுப்­பா­திப்பு இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. திருச்­சூர் மாவட்­டத்­தில் மட்­டும் மூன்று பேர் தொற்­றுப்­பாதிப்­பால் பலி­யா­கி­விட்­ட­னர்.

திரு­வ­னந்­த­பு­ரம், எர்­ணா­குளம் போன்ற மாவட்­டங்­களில் தொற்று எண்­ணிக்கை மெல்ல அதி­க­ரித்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள கேரள சுகா­தார அமைச்­சர் வீணா ஜார்ஜ், தொற்­றுப் பாதிப்­புக்­காக சிகிச்சை பெற்று வரும் 1,026 பேரில் 11 பேர் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

இதை­ய­டுத்து கேர­ளா­வின் அனைத்து மாவட்டங்களும் விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள் ளன.

தொற்­றுப்­ப­ர­வ­லைத் தடுப்­ப­தற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொள்ள வேண்­டும் என மாவட்ட நிர்­வா­கங்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

மேலும், பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது நல்லது என்றும் அம்­மா­நில அரசு அறி­வுறுத்தி உள்­ளது.

பாதிப்பு அதி­க­ரித்து வரு­வ­தால் இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்பட்­டுள்­ளது என்றும் பொது­மக்­கள் அர­சுக்கு ஒத்துழைக்க வேண்­டும் என்­றும் சுகா­தா­ரத்­துறை கேட்­டுக்­கொண்­டுள்­ளது.