எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சரத் பவார்

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சரத் பவார்

1 mins read
d95c224f-c7e6-40f3-a429-032b5b9eb817
-

புது­டெல்லி: எதிர்க்­கட்­சி­கள் அடங்­கிய புதிய கூட்­ட­ணியை உரு­வாக்­கு­வ­தில் தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் சரத் பவார் தீவிர முனைப்பு காட்டி வரு­கி­றார்.

அவ­ரது ஏற்­பாட்­டில் நேற்று டெல்­லி­யில் எதிர்க்­கட்­சித் தலை­வர்­கள் சந்­தித்­துப் பேசி­ய­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

2024ஆம் ஆண்டு மக்­க­ள­வைத் தேர்­த­லில் பாஜ­கவை எதிர்க்க வலு­வான எதிர்க்­கட்­சிக் கூட்­டணி தேவை என அர­சி­யல் ஆய்­வா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து, மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி, தெலுங்­கானா முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ், சரத் பவார், தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின், டெல்லி முதல்­வர் கெஜ்­ரி­வால் உள்­ளிட்ட தலை­வர்­கள் வலு­வான எதிர்க்­கட்சிக் கூட்­ட­ணியை அமைக்க பல்­வேறு முயற்­சி­களை தனித்­த­னியே மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

இத­னால் ஒரு­மித்த கருத்­து­டன் எதிர்க்­கட்­சிக் கூட்­டணி அமை­வ­தில் சிக்­கல் நிலவி வரு­கிறது.

இந்­நி­லை­யில், எதிர்க்­கட்­சிக் கூட்­ட­ணித் தலை­வர்­க­ளுக்கு சரத் பவார் அழைப்பு விடுத்­தி­ருந்­தார். சுதந்­தி­ர­மான, வெளிப்­ப­டை­யான முறை­யில் தேர்­தல் நடத்­து­வது, மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள் துல்­லி­ய­மாக செயல்­ப­டு­தல், அவற்­றின் செயல்­தி­றன் குறித்து ஏதே­னும் சந்­தே­கம் ஏற்­பட்­டால் தேர்­தல் ஆணை­யம் அதனை சரிசெய்ய வேண்­டும் என்­பன உள்­ளிட்ட அம்­சங்­களை தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கி­றார் சரத் பவார்.