நோயாளியைச் சீரழித்த அரசு மருத்துவமனை ஊழியர் கைது

1 mins read
1b1b9a8b-21f7-4a25-a895-cbdc73b498a7
-

திரு­வ­னந்­தபுரம்: அரசு மருத்துவ ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணை அங்­கி­ருந்த ஊழி­யர் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­தி­யது கேர­ளா­வில் அதிர்ச்சி ஏற்­ப­டுத்தி உள்­ளது.

பாதிக்­கப்­பட்ட அந்த 36 வயது பெண், அண்­மை­யில் மேற்­கொண்ட அறுவை சிகிச்­சைக்­குப் பின்­னர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், மருத்­து­வர்­களும் தாதி­ய­ரும் வெளியே சென்­றி­ருந்த நேரத்­தைப் பயன்­படுத்தி அரை மயக்­கத்­தில் இருந்த பெண்ணை 55 வய­தான சசி­த­ரன் என்ற மருத்­து­வ­மனை ஊழி­யர் சீர­ழித்­துள்­ளார். மயக்­கம் தெளிந்த பின்­னர் அந்­தப் பெண் தனக்கு நேர்ந்த அவ­லம் குறித்து குடும்­பத்­தா­ரி­டம் தெரி­வித்­தார். இதை­ய­டுத்து காவல்­துறை விசா­ரணை நடத்தி சசி­த­ர­னைக் கைது செய்­துள்­ளது.