புதிய அறிக்கை: ஹிண்டன்பர்க் 'புதுக்குண்டு'

புதிய அறிக்கை: ஹிண்டன்பர்க் 'புதுக்குண்டு'

2 mins read
50e26594-e99d-4456-8a2b-5f147d139339
-

புது­டெல்லி: மிக விரை­வில் புதிய ஆய்­வ­றிக்கை ஒன்றை வெளி­யி­டப் போவ­தாக அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த ஹிண்­ட்­பர்க் ஆய்வு நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது. இதை­யடுத்து அதானி குழும நிறு­வ­னம் குறித்தோ அல்­லது வேறு ஏதே­னும் இந்­திய நிறு­வ­னங்­கள் பற்­றியோ அந்த ஆய்வு நிறு­வ­னம் புதிய தக­வல்­களை வெளி­யி­டுமா எனும் பர­ப­ரப்பு நிலவி வரு­கிறது.

அண்­மை­யில் இந்­தி­யா­வின் முன்­னணி தொழில் நிறு­வ­ன­மான அதானி குழு­மம் குறித்து ஹிண்­டன்­பர்க் வெளி­யிட்ட தக­வல்­களால் அதானி குழும நிறு­வ­னங்­கள் ஆட்­டம் கண்­டுள்­ளன.

பங்­குச்­சந்­தை­யில் அந்­நி­று­வ­னப் பங்­கு­கள் பெரும் வீழ்ச்­சி­யைக் கண்­டன. ஹிண்­டன்­பர்க் வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்­டு­களை அதானி நிறு­வ­னம் முற்­றி­லு­மாக மறுத்­தி­ருந்­தது. இந்த விவ­கா­ரம் கார­ண­மாக, இந்­திய அர­சி­யல் களத்­தி­லும் பர­ப­ரப்பு நிலவி வரு­கிறது. அதானி குழும விவ­கா­ரம் தொடர்­பாக விசா­ரிக்க உச்ச நீதி­மன்­றம் ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

நாடா­ளு­மன்­றக் கூட்­டுக்­குழு இது குறித்து விசா­ரிக்க வேண்­டும் என எதிர்க்­கட்­சி­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், அதானி குழும முறை­கே­டு­கள் எனக் குறிப்­பிட்டு, ஆய்­வ­றிக்கை வெளி­யிட்ட ஹிண்­டன்­பர்க் ஆய்வு நிறு­வ­னம், மிக விரை­வில் புதிய அறிக்கை ஒன்றை வெளி­யிட உள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. இத­னால் அர­சி­யல் களத்­தில் மீண்­டும் பர­ப­ரப்பு எழுந்­துள்­ளது.

இத­னி­டையே, அதானி விவ­கா­ரம் தொடர்­பாக நாடா­ளு­மன்­றக் கூட்­டுக்­குழு விசா­ர­ணை­தான் தேவை என்­றும் உச்ச நீதி­மன்­றம் நிய­மித்த நிபு­ணர் குழு­வா­னது, அந்­நி­று­வ­னத்­துக்கு நற்­சான்­றி­தழ் அளிக்­கும் குழு­வா­கவே இருக்­கும் என்­றும் காங்­கி­ரஸ் கட்சி தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய அக்­கட்­சி­யின் மூத்த தலை­வர் ஜெய்­ராம் ரமேஷ், அதானி நிறு­வ­னம் குறித்து மத்­திய அர­சி­டம் இது­வரை 99 கேள்­வி­களை எதிர்க்­கட்­சி­கள் கேட்­டுள்­ளன என்­றார்.

தற்­போது நூறா­வது கேள்­வி­யைக் கேட்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், நாட்டு நலன் கருதி இந்த விவ­கா­ரம் குறித்து விசா­ரணை அமைப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்தி மத்திய அரசு நியா­ய­மாக செயல்­படுமா என்­பதே அந்­தக் கேள்வி என்­றார்.

"அதானி விவ­கா­ரத்­தில் கடந்த 2ஆம் தேதி உச்ச நீதி­மன்­றம் ஒரு நிபு­ணர் குழுவை அமைத்­தது. ஆனால், அக்­கு­ழு­வுக்கு விசா­ரணைக் குழுக்­கள் மீது முறைப்­ப­டி­யான அதி­கா­ர­வ­ரம்பு கிடை­யாது.

"நண்­பர்­க­ளு­ட­னான நெருக்­கம் பற்­றியோ, நண்­பர்­களை செழிப்­பாக்க ஆட்­சியை பயன்­ப­டுத்­தி­யது குறித்தோ விசாரிக்க அந்த நிபு­ணர் குழு­வுக்கு அதி­கா­ரம் இல்லை," என்றார் ஜெய்­ராம் ரமேஷ்.