16 கோடி பேரின் தகவல்களைத் திருடி, விற்ற ஏழு பேர் கைது

16 கோடி பேரின் தகவல்களைத் திருடி, விற்ற ஏழு பேர் கைது

1 mins read
c16a8518-532d-437f-a737-6658af3c3eb8
-

திருப்­பதி: இந்­திய மாநிலங்களில் பரவலாக வசித்து வரும் 16 கோடியே 80 லட்­சம் பேரின் தனிப்­பட்ட விவ­ரங்­களைத் திருடி, விற்பனை செய்துள்ள ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்­பேசி எண்­கள், மின்­னஞ்­சல் முக­வரி, வங்­கிக் கணக்கு விவ­ரங்­கள் உட்­பட பல்வேறு தக­வல்­க­ளை­யும் ஒரு கும்­பல் திருடி வருவதாக தெலுங்­கானா காவல்­து­றைக்குத் தக­வல் கிடைத்தது.

இதை­ய­டுத்து, ஹைத­ரா­பாத்தில் உள்ள சைப­ரா­பாத் பகுதி குற்றத் ­த­டுப்புக் காவலர்கள், தனி நபர் தக­வல்­ திருட்டு, தக­வல் விற்பனை தொடர்­பாக வழக்குப் பதிந்து ஏழு பேர் கொண்ட கும்­பலைக் கைது செய்­த­னர்.

மூன்று நிறுவனங்களை உருவாக்கிய இந்தக் கும்பல், அவற்­றின் துணையுடன் ராணுவ அதி­கா­ரி­கள், பொதுமக்கள், அரசு ஊழி­யர்­கள் உள்ளிட்டோரின் தனிப்­பட்ட விவ­ரங்­கள், கைப்பேசி எண்­கள், பான் கார்டு விவ­ரங்­கள், வங்­கி­க­ளின் டெபிட், கிரெ­டிட் கார்டு உட்­பட பலதரப்பட்ட விவ­ரங்­களைத் திருடி, அவற்றை இணைய மோச­டி­யில் ஈடு­ப­டு­பவர்­க­ளுக்கு விற்­பனை செய்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இம்மோச­டி­யில் ஈடு­பட்ட உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தைச் சேர்ந்த குமார் நித்­திஷ் பூஷண், பூஜா பால், சுஷில் தோமோர், அத்­துல் பிர­தாப் சிங், முஸ்­கான் ஹசன், சந்­தீப் பால், ஜியா­வுல் ரஹ்­மான் ஆகிய ஏழு பேரையும் கைது செய்த காவலர்கள், அவர்களிடம் இருந்து ஆதார் அட்டைகள், 13 கைப்பேசிகள், மூன்று மடிக் கணினி­கள் உட்­பட ஏராளமான ஆவணங்களையும் கைப்­பற்­றி உள்ளனர்.