உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் மனு புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் அரசு

உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் மனு புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் அரசு

2 mins read
84b8ede0-d886-4056-9e47-5c98d8f70a15
-

புது­டெல்லி: சிபிஐ, அம­லாக்­கத் துறை போன்ற புல­னாய்வு அமைப்பு­களை மத்திய அரசு தங்களுக்கு எதி­ராக கண்­மூ­டித்­த­ன­மாகப் பயன்­ப­டுத்தி வரு­வ­தாக உச்ச நீதி­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சிகள் பலவும் இணைந்து நேற்று மனுத் தாக்­கல் செய்தன.

காங்­கி­ரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ராஷ்டிரிய சமிதி, திரி­ணா­மூல் காங்­கி­ரஸ், சிவசேனா உள்­ளிட்ட 14 எதிர்க்­கட்­சி­கள் மனுவைத் தாக்கல் செய்தன.

எதிர்க்கட்சிகளின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தாக்கல் செய்துள்ள மனு தொடர்­பான விசா­ரணை ஏப்­ரல் 5ஆம் தேதி நடத்­தப்­படும் என்று உச்ச நீதி­மன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்­தி­ர­சூட் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, காங்­கி­ரஸ் எம்.பி. ராகுல் காந்­திக்கு வியா­ழக்­கி­ழமை அன்று இரண்­டாண்­டு­ கால சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டதைக் கண்­டித்து அதி­பர் மாளிகை நோக்கி பேரணியாகச் செல்ல எதிர்க்­கட்­சி­யி­னர் நேற்று மாலை திட்­ட­மிட்­டி­ருந்­த­னர்.

கடந்த 2019ல் மக்­க­ள­வைத் தேர்­தல் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்ட ராகுல் காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி என பணத்தை அபகரித்த அனை­வ­ரது பெயர்­க­ளுக்­குப் பின்­னா­லும் ஏன் மோடி என்ற பெயர் உள்­ளது? என கேள்வி எழுப்­பி­னார்.

இப்பேச்சு சர்ச்­சையை ஏற்­படுத்­திய நிலை­யில், ராகுல் மீது நட­வ­டிக்கை எடுக்­கக்­கோரி குஜ­ராத் மாநி­லம், சூரத் மாவட்ட நீதி­மன்­றத்­தில் பாஜக எம்­எல்ஏ பூர்­ணேஷ் மோடி வழக்குத் தொடர்ந்­தார்.

மோடி என்ற சமூ­கத்தை ராகுல் காந்­தி­யின் பேச்சு அவ­மதித்துவிட்­ட­தாக மனு­வில் அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், நீதி­பதி எச்­எச் வர்மா ராகுல் காந்­திக்கு இரண்­டாண்­டு­கள் சிறைத்தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அவ­தூறு வழக்­கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இந்தத் தண்டனை காங்­கி­ரஸ் தொண்­டர்­க­ளி­டையே கடும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்திய நிலையில், டெல்லி முழு­வ­தும் காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

கர்­நா­டக மாநி­லம், பெங்­க­ளூருவில் மாநில காங்­கி­ரஸ் கட்சி அலு­வலக வளா­கத்­தில் இளை­ஞர் காங்­கி­ர­சார் திரண்டு எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி, பாஜக அர­சுக்கு எதி­ராகக் கண்­டன முழக்­கங்­களை எழுப்­பினர்.

தமி­ழ­கத்­தின் பல்­வேறு இடங்­களிலும் சாலைமறி­யல் போராட்­டம், ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்­றன. அர­சியல் உள்­நோக்­கத்துடன் ராகுலுக்குச் சிறை விதித்திருப்­பதாக காங்­கி­ரஸ் கட்சியினர் சாடியுள்ளனர்.